கொளுத்தும் கோடையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி இல்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 10, 2024

கொளுத்தும் கோடையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி இல்லை

மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு தலைமைச் செயலாளர் ஆணை

சென்னை,மே 10- தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசுவதால் கோடைவிடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதை தவிர்க்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த பல நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசுகிறது. சில மாவட் டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. பெரியவர்களா லும் வெளியே செல்ல முடிய வில்லை. கோடை விடுமுறை காலத்தில் சில பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் சிறப்பு வகுப்புகளை நடத்தும். தேர்ச்சி விகிதத்தை கருத்தில் கொண்டு அதுபோன்ற வகுப்புகள், பயிற்சிகளை நடத் துவது வழக்கமாக உள்ளது.

வானிலை ஆய்வு மய்யத்தின் அறிவிப்பு
ஆனால், இந்த ஆண்டு அவற்றை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
இதுபற்றி தமிழ்நாடு அரசு நேற்று (9.5.2024) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
இந்திய வானிலை ஆய்வு மய் யத்தின் கோடை காலத்திற்கான வெப்ப அலை குறித்த அறிவிக் கையில், நாட்டின் பெரும்பான் மையான பகுதிகளில், குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட தீபகற்ப பகுதிகளில் மார்ச் முதல் மே மாதம் வரை அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும்; வெப்ப அலை வீசும் நாட்களின் எண் ணிக்கையும் கூடுதலாக இருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

மேலும், கடந்த ஏப்ரல் மாதத் தில் வட தமிழ்நாட்டின் உட் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பைக் காட்டிலும் 3 முதல் 5 டிகிரிவரை அதிகமாக பதிவாகியுள்ளது. எனவே வெப்ப அலையின் தாக்கத்தின் காரணமாக ஏற்படும் பாதிப் புகளை குறைப்பதற்கு மேற் கொள்ள வேண்டிய முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஏற்கெனவே தலைமைச் செயலாளர் தலைமையிலும், வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையிலும் பல் துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சிகளின் கூட்டம் நடத்தப் பட்டு, அறிவுரைகள் வழங்கப்பட் டுள்ளன. இந்நிலையில் வருகிற 16ஆம் தேதிவரை தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் 36-40 டிகிரி வரை வெப்பம் பதிவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. எனவே, தமிழ்நாட்டில் பெரும் பான்மையான இடங்களில் கடுமையான வெப்பமும், வெப்ப அலைக்கு நிகரான பருவ நிலையும் நிலவி வருவதால், பொதுமக்கள் வெப்பம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்படக் கூடிய சூழ்நிலை உள்ளது.

சிறப்பு வகுப்புகள் கூடாது
வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து சிறுவர், சிறுமியரின் நலனை பாதுகாக்க வேண்டி யதன் அவசியம் கருதி, கோடை விடுமுறை நாட்களில் தமிழ்நாட் டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் எல்லா வகையான பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இதனை உறுதி செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
-இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment