கோவிஷீல்ட் தடுப்பூசியால் பக்க விளைவுகள் இல்லை: அச்சப்பட வேண்டாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 14, 2024

கோவிஷீல்ட் தடுப்பூசியால் பக்க விளைவுகள் இல்லை: அச்சப்பட வேண்டாம்

featured image

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை, மே.14-கோவிஷீல்டு தடுப் பூசியால் பக்கவிளைவுகள் இல்லை என் றும், தேவையற்ற பதற்றம் கொள்ள வேண்டாம் என்றும் அமைச்சர் மா.சுப்பிர மணியன் கூறினார். கோயம்பேட்டில் தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தலை அமைச் சர் மா.சுப்பிரமணியன் 12.5.2024 அன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அவ ரிடம், கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட வர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு வரு வதாக கூறப்படுகிறதே என்று செய்தியாளர் கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அமைச் சர் மா.சுப்பிரமணியன் அளித்த பதில் வருமாறு:-
கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ் நாட்டில் பக்கவிளைவுகள் இல்லை. எந்த தடுப்பூசியாக இருந்தாலும் அவரவர் உட லில் உள்ளநோய் எதிர்ப்பு திறனை பொறுத்துதான் பின்விளைவுகள் இருக் கும். அதாவது ரத்தம் உறைதல் மாதிரி யான பாதிப்புகள் இருக்கும் என்று சொல் லியிருக்கிறார்கள். இது வரை பெரியளவில் பாதிப்புகள் வெளியே தெரியவில்லை.
கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ் நாட்டில் யாருக்கும் எவ்வித பக்க விளை வுகளும் ஏற்படவில்லை யாரும் பதற்றத் துடன் இருக்க வேண்டாம். நோய் எதிர்ப்பு சக்தி தங்கள் உடலில் குறையாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண் டும். காலையில் எழுந்து நடப்பது உள் ளிட்ட உடற்பயிற்சிகளை செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதி கரித்துக்கொள்ள வேண்டும். -இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment