திறந்தவெளி சிறைகளை அமைக்கலாம்: உச்சநீதிமன்றம் கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 11, 2024

திறந்தவெளி சிறைகளை அமைக்கலாம்: உச்சநீதிமன்றம் கருத்து

featured image

புதுடில்லி,மே 11- சிறைகளில் நெரிசலை குறைப்பதற்காக நாடு முழுவதும் திறந்தவெளி சிறைகளை உருவாக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறி யுள்ளது.
சிறைகள் மற்றும் கைதிகள் தொடர்பான ஒரு மனு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள் ளது. இந்த மனு, நேற்று (10.5.2024) நீதி பதிகள் பி.ஆர். கவாய், சந்தீப் மேத்தா ஆகி யோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-

சிறைகளில் நெரிசலை குறைப் பதற்கான தீர்வுகளில் ஒன்று, திறந்தவெளி சிறைகள் மற்றும் திறந்தவெளி முகாம் கள் அமைப்பது. இந்த நடை முறை, ராஜஸ்தான் மாநிலத் தில் சிறப்பாக செயல்படு கிறது. இடநெருக்கடிக்கு தீர்வு காண் பதுடன் கைதிகளின் மறு வாழ்வு பிரச்சினைக்கும் இது தீர்வு காண்கிறது.
திறந்தவெளி சிறை நடை முறையை நாடு முழுவதும் விரிவு படுத்த விரும்புகிறோம். பாதி அளவோ அல்லது முழுமையா கவோ திறந்தவெளி சிறைகளை உருவாக்கலாம். பகல் நேரத்தில் கைதிகள் வெளியே சென்று வேலை செய்து வாழ்வாதாரத்துக்கு சம்பாதிக்கவும், மாலையில் சிறைக்கு திரும்பவும் ஏற்பாடு செய் யலாம்.

இதன்மூலம் கைதிகளை சமுதாயத்துடன் ஒருங்கி ணைக்க செய்ய முடியும். சிறைக்கு வெளியே இயல்பு வாழ்க்கை நடத்துவதில் கைதி கள் சந்திக்கும் மன உளைச் சலை குறைக்க முடியும்.இருப் பினும், சிறை சீர்திருத்தங்கள் தொடர்பான விவகாரத்தை நாங் கள் தொட மாட்டோம். அது தொடர்பான வழக்குகள் மற்ற அமர்வுகளில் நிலுவையில் உள் ளன. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
தேசிய சட்டப்பணிகள் ஆணை யம் சார்பில் ஆஜரான வழக் குரைஞர், திறந்தவெளி சிறை குறித்து மாநிலங்களிடம் கருத்து கேட்டதாகவும், 24 மாநிலங்கள் மட்டும் பதில் அளித்திருப்பதாகவும் கூறி னார்.

அடுத்தகட்ட விசார ணையை மே 16ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment