பாலியல் குற்றவாளி ரேவண்ணா இந்தியா வராமல் ஜெர்மனியிலேயே தங்க திட்டம்? கடைசி நேரத்தில் விமான பயணச்சீட்டை ரத்து செய்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 13, 2024

பாலியல் குற்றவாளி ரேவண்ணா இந்தியா வராமல் ஜெர்மனியிலேயே தங்க திட்டம்? கடைசி நேரத்தில் விமான பயணச்சீட்டை ரத்து செய்தார்

பெங்களூரு, மே.13- கருநாடக மாநிலம் ஹாசன் தொகுதி ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.பி.யாக இருந்து வருபவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர், பெண்களுடன் ஆபா சமாக இருக்கும் காட்சிப் பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.

இந்த வழக்கில் அவரை கைது செய்ய காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின் றனர். ஆனால் அவர் வெளிநாட் டில் தலை மறைவாக உள்ளார். இதனால் பிரஜ்வல் ரேவண்ணா வுக்கு எதிராக புளூ கார்னர் தாக்கீது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதலில் ஜெர்மனியிலும், பின்னர் துபாயிலும் பிரஜ்வல் ரேவண்ணா இருப்பதாக கூறப்பட்டது. பின்னர் வருகிற 15-ஆம் தேதி அவர் பெங்களூ ருவுக்கு வருவதாக கூறப்பட்டது.
அன்றைய தினம் ஜெர்மனி யில் இருந்து பெங்களூருவுக்கு வருவதற்கான விமான பயணச் சீட்டை பிரஜ்வல் ரேவண்ணா முன்பதிவு செய்திருந்தார்.
இதனால் பிரஜ்வல் ரேவண்ணாவின் வருகையை எதிர்நோக்கி இருந்த காவல் துறையினர் அவரை கைது செய்ய தயாராகி வந்தனர்.
இந்நிலையில், விமான பயணச் சீட்டை பிரஜ்வல் ரேவண்ணா ரத்து செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது ஜெர்மனியில் இருந்து பெங்களூருவுக்கு வருகிற 15-ஆம் தேதி வருவதற்காக முன்பதிவு செய்திருந்த இருந்த பயணச் சீட்டை பிரஜ்வல் ரேவண்ணா ரத்து செய்துள்ளார். இதனால் பிரஜ்வல் ரேவண்ணா தற்சமயம் பெங்களூருவுக்கு வரப்போவதில்லை என்றும், வெளிநாட்டிலேயே தலை மறை வாக இருக்க தீர்மானித்திருப் பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், பிரஜ்வல் ரேவண்ணாவால் பாலியல் வன் கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பெண் ஒருவர் பேசும் காட்சிப் பதிவு வெளியாகி உள்ளது. அதில், தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், இந்த சம்பவத்திற்கும் எச்.டி.ரேவண்ணாவுக்கும் தொடர்பு இல்லை என்றும் அந்த பெண் பேசியுள்ளார்.
இது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடை யில் அந்த காட்சிப் பதிவில் பெண் பேசியிருப்பது பிரஜ்வல் ரேவண்ணா மீது நீதிபதியிடம் வாக்குமூலம் அளிப்பதற்கு முன்பாக கூறியது என்று சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment