இட ஒதுக்கீட்டை ஒழிப்பதற்கு அரசுத் துறைகளை தனியாருக்கு தாரைவார்க்கும் பிரதமர் மோடி ராகுல் காந்தி குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 11, 2024

இட ஒதுக்கீட்டை ஒழிப்பதற்கு அரசுத் துறைகளை தனியாருக்கு தாரைவார்க்கும் பிரதமர் மோடி ராகுல் காந்தி குற்றச்சாட்டு

featured image

அய்தராபாத், மே 11-  அதானிக்கு கடந்த 10 ஆண்டுகளில் ஏராள மான ஒப்பந்தங்களை பிரதமர் மோடி வாரி வழங்கி இருப்ப தாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி யுள்ளார்.

பிரதமர் குற்றச்சாட்டு

அதானி, அம்பானி போன்ற மிகப் பெரும் தொழிலதிபர் களுக்காகவே பிரதமர் மோடி உழைத்து வருவதாக ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
ஆனால், தேர்தல் அறிவிக் கப்பட்ட பிறகு இவர்களை விமர்சிப்பதை அவர் நிறுத்தி விட்டதாக நேற்று முன்தினம் (8.5.2024) குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, அவர்களிடம் இருந்து வேனில் கட்டுக்கட் டாக பணம் பெற் றீர்களா? என கேள்வியும் எழுப்பி இருந் தார்.
இதற்கு பதிலடி கொடுத்தி ருந்த ராகுல் காந்தி, அதானி- அம்பானி பணம் கொடுத்தார் களா? என்பதை விசாரிக்க அவர்கள் வீட்டுக்கு அமலாக் கத்துறை மற்றும் சி.பி.அய்.யை அனுப்பி வையுங்கள் என்று கூறியிருந்தார்.
இதைப்போல காங்கிரஸ் கட்சி யும், பிரதமர் மோடியை குறை கூறியிருந்தது. ராகுல் காந்தி சமீப நாட்களாக அதானி, அம்பானியை விமர்சித்த காட் சிப் பதிவுகளையும் வெளியிட்டு இருந்தது.

மாபெரும் பணக்காரர்கள்

இந்த பரபரப்பு அடங்குவ தற்குள் அதானி விவகாரத்தில் நேற்று முன்தினம் (9.5.2024) மீண்டும் பிரதமர் மோடியை ராகுல் காந்தி குற்றம் சாட்டி யுள்ளார்.
தெலங்கானாவில் நடந்த தேர் தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, இது தொடர்பாக கூறியதாவது:-
பிரதமர் மோடி ஒட்டு மொத்த நாட்டிலும் வெறும் 20-22 தொழில திபர்களுக்காக மட்டுமே உழைக் கிறார். அவர் களை மாபெரும் பணக்காரர் களாக மாற்றியுள்ளார்.
கடந்த 10 ஆண்டு கால ஆட் சியில், துறைமுகங்கள். விமான நிலையங்கள் என ஏராளமான உள்கட்டமைப்பு திட்டங்கள் மற் றும் ராணுவ ஒப்பந்தங்களை அதானிக்கு பிரதமர் மோடி வாரிவழங்கி இருக்கிறார்.

இட ஒதுக்கீட்டை ஒழிப்ப தற்காக ஏராளமான அரசு நிறு வனங்களை பிரதமர் மோடி தனியாருக்கு தாரை வார்த்துள் ளார்.
பா.ஜனதா இடஒதுக் கீட்டை ஒழிக்க விரும்புகிறது. காங்கிரசோ அதை 50 சதவீதத் துக்கு மேல் அதிகரிக்க விரும்பு கிறது.
ஒன்றியத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப் படும்.
-இவ்வாறு ராகுல் காந்தி கூறி னார்.

இளைஞர்களுக்கு அறிவுறுத்தல்

இதற்கிடையே தனது எக்ஸ் தளத்தில் காட்சிப் பதிவு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, நாடாளுமன்ற தேர்தல் மோடியின் கையை விட்டு நழுவி வருவதாக  இளைஞர்களுக்கு கூறியுள் ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருந்ததாவது,
இளைஞர்கள்தான் நாட்டின் பலம் வேலையில்லா திண்டாட் டம்தான் தற்போ தைய மிகப்பெரிய பிரச்சினை யாக உள்ளது. மோடி ஆண் டுக்கு 2 கோடி வேலை வழங் கப்படும் என கூறியிருந்தார். அவர் ஒரு பொய்யை கூறினார். பணமதிப்பு நீக்கத்தை கொண்டு வந்தார்.
தவறான ஜி.எஸ்.டி.யை அமல் படுத்தினார். அதானி போன்ற தொழிலதிபர்களுக்க காவே பணியாற்றினார்.

நாடகங்களை அரங்கேற்றுவார்

இந்த நாடாளுமன்ற தேர் தல் பிரதமர் மோடியின் கையில் இருந்து நழுவி வருகிறது. அவர் இனிமேலும் இந்தியாவின் பிரத மராக இருக்க மாட்டார்.
எனவே, உங்களின் கவ னத்தை திசை திருப்புவதற்காக அடுத்த 4 அல்லது 5 நாட்களில் சில நாட கங்களை அரங்கேற்ற முடிவு செய்துள்ளார். ஆனால் உங்கள் கவனம் சிதறக்கூடாது.
ஜூன் 4ஆம் தேதி இந்தியா கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைக்கப் போகிறது. நான் உங் களுக்கு வாக்குறுதி அளித்திருக்கும் 30 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப் பும் நடவடிக்கைகளை ஆகஸ்டு 15ஆம் தேதிக்குள் தொடங்கி விடுவோம்.
நரேந்திர மோடியின் பொய்ப்பிரச்சாரத்தில் ஏமாந்து விடா தீர்கள். உங்கள் பிரச்சினைகளில் உறுதியாக இருங்கள். இந்தியா கூட்டணி யின் வாக்குறுதிகளைக் கேளுங் கள்.
வேலைகளைத் தேர்ந் தெடுங்கள், வெறுக்காதீர்கள்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறியிருந்தார்.

No comments:

Post a Comment