எனது உடல்நிலை பற்றி பிஜேபி பொய்ப் பிரச்சாரம் செய்வதா? ஒடிசா முதலமைச்சர் அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 25, 2024

எனது உடல்நிலை பற்றி பிஜேபி பொய்ப் பிரச்சாரம் செய்வதா? ஒடிசா முதலமைச்சர் அறிக்கை

featured image

புவனேஸ்வரம், மே 25- எனது உடல்நிலை பற்றி பா. ஜனதா பொய்சொல்கிறது. நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன் என்று ஒடிசா மாநில முதல மைச்சர் நவீன் பட்நாயக் கூறி யுள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக பிஜு ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக் முதலமைச்சராக இருக்கிறார். தற்போது, நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா சட்டசபை தேர்தலும் நடக்கிறது. அதில், 6ஆவது தடவையாக ஆட்சி அமைக்கும் நோக்கத்துடன் நவீன் பட்நாயக் போட்டியிடுகிறார்.
நவீன் பட்நாயக்குக்கு வயது 77. முதுமை மற்றும் உடல் நிலையை கருதி, அவருக்கு ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்று பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் பேசிவருகிறார்கள். காணொலி காட்சிப் பதிவுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை நவீன் பட்நாயக் பயன்படுத்துவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

இந்நிலையில், அதற்கு நவீன் பட்நாயக் பதில் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

எனது உடல்நிலை குறித்து பா.ஜனதாபொய் சொல்லி வருகிறது. பொய் சொல்வதற்கும் ஒரு எல்லை வேண்டும். நான் நல்ல உடல்நலத்துடன் இருப் பதை நீங்களே பார்க்கிறீர்கள். மாநிலம் முழுவதும் மாதக்கணக் கில் பிரச்சாரம் செய்துள்ளேன்.
நான் செயற்கை நுண்ண றிவை பயன்படுத்துவதாக சொல்லும் பா.ஜனதாவினர், தங்கள் சொந்த நுண்ணறிவை பயன்படுத்த வேண்டும். -இவ் வாறு அவர் கூறியுள்ளார்.

வரலாறு மன்னிக்காது:

நவீன் பட்நாயக்குக்கு நெருக்க மான மேனாள் அய்.ஏ.எஸ்.அதிகாரி வி.கே.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது, முதலமைச்சரை வசை பாடுவதன் மூலம் பிஜு ஜனதா தளத்தின் ஓட்டு வங்கி அதி கரிப்பதற்குத்தான் பா.ஜனதா தலைவர்கள் உதவி வருகிறார்கள்.
நாம் முதிர்ந்த ஜனநாயக நாடு. எனவே, எந்த அளவுக்கு பேச வேண்டும் என்ற எல் லையை வகுக்க வேண்டும். ஓட் டுக்காக மாபெரும் தலைவர் களை இழிவுபடுத்தக்கூடாது. வரலாறு உங்களை மன்னிக்காது.

இலக்கு: 25

ஆம் தேதி நடக் கும் 3ஆவது கட்ட தேர்தலுக்கு பிறகு பிஜு ஜனதாதளம் வசதியான பெரும்பான்மையை பெறும். இறுதிக்கட்ட வாக்குப் பதிவுக்கு பிறகு வெற்றி வித்தி யாசம் அதிகரிக்கும். மொத்தம் உள்ள 147 தொகுதிகளில், 30 தொகுதிகளில் வெற்றி பெறுவ தற்குத்தான் பா.ஜனதா இலக்கு நிர்ணயித்துள்ளது. 2014ஆம் ஆண்டிலிருந்து மாற்றம் பற்றி பா.ஜனதா பேசி வருகிறது. ஆனால், நவீன் பட்நாயக் அலை தான் இங்கு வீசி வருகிறது.
-இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment