ஆட்கொல்லி ஆன்லைன் சூதாட்டம் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 24, 2024

ஆட்கொல்லி ஆன்லைன் சூதாட்டம் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

கிருஷ்ணகிரி, மே 24- அரியலூர் மாவட்டம் கூவாகம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந் திரன். இவருடைய மகன் மணிவாசகன் (வயது 36). ஓசூர் 2-ஆவது சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி அருணா. இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒன்றரை வயதில் விசாகன் என்ற ஆண் குழந்தை உள்ளான். மணிவாசகன் தனது குடும்பத்தினருடன் ஓசூர் தோட்டகிரி பகுதியில் வசித்து வந்தார்.

மணிவாசகனுக்கு ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக ஈடுபாடு இருந்ததாக தெரிகிறது. அவர் அதிக நேரம் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் ஏராளமான பணத்தை இழந்து அதிகளவில் கடன் வாங்கியதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் ஊருக்கு சென்ற மனைவி அருணா தனது கணவருக்கு போன் செய்தார். ஆனால் அவர் போனை எடுத்து பேசாததால் அச்சமடைந்த அவர் அருகே வசிப்பவர்களுக்கு போன் செய்து தங்கள் வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறினார். பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிகண்டன் என்பவர் சென்று பார்த்தபோது மணிவாச கன் வீட்டில் உள்ள அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக மணிவாசகத் தின் மனைவி, ஓசூர் அட்கோ காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். காவல்துறையினர் நிகழ்வு இடத்துக்கு சென்று மணிவா சகனின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது வீட்டில் உள்ள ஒரு மேஜை யில் மணிவாசகன் தனது குடும்பத்தினருக்கு எழுதிய உருக்கமான கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றினர்.
அதில் நான் ஆன்லைன் சூதாட்டத்தில் ஏராளமான பணத்தை இழந்து விட்டேன். மேலும் ரூ.50 லட்சம் வரை கடன் உள்ளது. கடனை திருப்பி செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று அந்த கடிதத்தில் எழுதி வைத்திருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment