அரசு அய்.அய்.டி.யில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 10, 2024

அரசு அய்.அய்.டி.யில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை, மே 10 தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் அமுதவல்லி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (அய்டிஅய்) இயங்கி வருகின்றன.
இவற்றில் 2024-_2025ஆ-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர்சேர்க்கை நடைபெற உள்ளது. அரசு அய்டிஅய்-யில் சேர 8ஆ-ம் வகுப்பு அல்லது 10ஆ-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி மே 10 (இன்று) முதல் ஜூன் 7ஆ-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் 136 உதவி மய்யங்களில் விண்ணப்பிக்கலாம். இந்த மய்யங்களின் பட்டியல் மற்றும் தொலைபேசி விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால்94990-55689 என்ற அலைபேசி எண் வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment