மதவெறி-ஜாதி வெறியைத் தூண்டும் வகையிலுள்ள ஆளுங்கட்சித் தலைவர்களின் அறிக்கைகள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 13, 2024

மதவெறி-ஜாதி வெறியைத் தூண்டும் வகையிலுள்ள ஆளுங்கட்சித் தலைவர்களின் அறிக்கைகள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

featured image

தேர்தல் ஆணையத்துக்கு மல்லிகார்ஜூன கார்கே கேள்வி!

புதுடில்லி, மே 13- “வாக்குப்பதிவு சதவீதம் குறித்து இந்தியா கூட்டணித் தலைவர்களுக்கு நான் எழுதிய கடிதத் தின் விவரங்களை தேர்தல் ஆணையம் தேர்ந்தெடுத்து பதில் அளித்திருப் பதும், எனது பிற புகார்களைப் புறக்கணித்திருப்பதும் ஆச்சரியம் அளிக்கிறது” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
இரண்டு கட்ட வாக்குப்பதிவுகளில் வாக்குப்பதிவு சதவீதம் தாமதமாக வெளியிடுவது, அவற்றின் வேறுபாடு இருப்பது குறித்து கவலை தெரிவித்து இந்தியா கூட்டணித் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் எழுதியிருந்தார்.
இந்தக் கடிதத்துக்கு “விளக்கம் கேட்கும் போர்வையில் பாரபட்ச மான முடிவை உருவாக்கும் முயற்சி இது” என்று தேர்தல் ஆணையம் பதில் அளித்திருந்தது. இந்தக் கடிதத்துக்கு மல்லிகார்ஜுன கார்கே 11.5.2024 அன்று பதில் அளித்துள்ளார்.
அந்தக் கடிதத்தின் விவரம்: “அந்தக் கடிதம் வெளிப்படையான ஒன்று.

அது எங்களின் கூட்டணித் தலைவர்களுக்கு எழுதப்பட்டது. தேர்தல் ஆணையத்துக்கு இல்லை. இந்திய தேர்தல் ஆணை யம் அதன் முன்பு வைக்கப்பட்ட பல நேரடி புகார்களை புறக் கணித்து விட்டு, பதில் அளிப் பதற்கு இந்தக் கடிதத்தை தேர்ந்தெடுத்திருப்பது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. அந்தக் கடிதத்தின் மொழியில் எனக்கு சில சந்தேகங்கள் இருந்தாலும், அதுகுறித்து நான் அழுத்தம் கொடுக்கப் போவதில்லை. அவர்கள் பணிபுரியும் சூழலில் உள்ள அழுத்தத்தை நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.

சுமூகமான, சுதந்திரமான வெளிப் படையான தேர்தலை நடத்துவ தற்கான அதிகாரத்தை, அரசமைப்பி லிருந்து பெற்றிருப்பதை தேர்தல் ஆணையம் உணர்ந்திருப்பது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். எனினும், தேர்தல் நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையிலான ஆளுங் கட்சித் தலைவர்களின் அப்பட்ட மான மதவெறி மற்றும் ஜாதி வெறியைத் தூண்டும் அறிக்கை களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அவசரம் காட்டாதது புதிராகவே இருக்கிறது.
அதேநேரத்தில், உண்மையாகவே இருக்கும் பட்சத்திலும், ‘எந்த ஒரு தொகுதி மற்றும் மாநிலங்களின் மொத்த வாக்காளர்களின் வாக்குப் பதிவு சதவீதத்தை வெளியிடுவதற்கு சட்டப்பூர்வமாக தேர்தல் ஆணையம் கட்டுப்படவில்லை’ என்று குறிப்பி டப்பட வேண்டியதன் அவசியம் என்ன என்று நான் குழப்பம் அடைந் துள்ளேன். என்னைப் போலவே வாக் காளர்களும் குழப்பமடைந்திருப் பார்கள் என்று நினைக்கிறேன்.

இறுதியாக, இந்திய தேர்தல் ஆணையத்தின் ஜனநாயக மற்றும் சுதந்திரமான செயல்பாடுகளை பாதுகாப்பது நமது கூட்டுப்பொறுப்பு என்ற கடிதத்தில் உள்ள வரிகளுக்கு தேர்தல் ஆணையம் எதுவும் குறிப்பிடாதது எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது என்பதை நான் சொல்லிக்கொள்கிறேன். இதனை இன்னும் தெளிவுபடுத்தும் விதமாக, காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தின் பக்கம் நிற்கும், ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் வலிமைக்காக அதன் பக்கம் நிற்கும். தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு என்ன என்பதை அதன் அதிகாரிகள் தற்போது முடிவு செய்யவேண்டும்” என்று கார்கே தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment