‘இந்தியா’ கூட்டணி வென்றால் ‘அக்னிவீர்’ திட்டம் ஒழிக்கப்படும், ஜி.எஸ்.டி. சட்டம் திருத்தப்படும்! ராகுல் காந்தி உறுதி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 9, 2024

‘இந்தியா’ கூட்டணி வென்றால் ‘அக்னிவீர்’ திட்டம் ஒழிக்கப்படும், ஜி.எஸ்.டி. சட்டம் திருத்தப்படும்! ராகுல் காந்தி உறுதி!

featured image

ராஞ்சி, மே 9- ஜார்க்­கண்ட் மாநி­லம் கும்­லா­வில் நடை­பெற்ற தேர்­தல் பிரச்­சார பொதுக்­கூட்­டத்­தில் காங்­கி­ரஸ் மே­னாள் தலை­வர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசி­னார். அப்­போது அவர் கூறி­ய­தா­வது;-
“இந்­தியா கூட்­டணி வெற்றி பெற்­றால், பிர­த­மர் மோடி­யால் கொண்டு வரப்­பட்ட ‘அக்­னி­வீர்’ திட்­டம் ஒழிக்­கப்­ப­டும். அந்த திட்­டத்தை இந்­திய ராணு­வம் கொண்டு வர­வில்லை. தியா­கி­களை நாங்­கள் வேறு­ப­டுத்­திப் பார்க்க விரும்­ப­வில்லை. தேசத்­துக்­காக தியா­கம் செய்­யும் எவ­ருக்­கும் தியாகிக்கான தகுதி வழங்­கப்­பட வேண்­டும், அவர்­க­ளுக்கு ஓய்­வூ­தி­யம் கிடைக்க வேண்­டும்.
பா.ஜ.க. அரசு அய்ந்து வரி அடுக்­கு­க­ளு­டன் தவ­றான ஜி.எஸ்.டி. திட்­டங்­களை செயல்­ப­டுத்­தி­யது. நாங்­கள் அதைத் திருத்தி குறைந்­த­ பட்­ச­மாக ஒரு வரி அடுக்கை உரு­வாக்­கு­வோம். ஏழை­கள் மீதான வரிச்­சு­மை­யைக் குறைப்­போம்.

பழங்­கு­டி­யின மக்­க­ளுக்கு பா.ஜ.க. தலை­மை­யி­லான ஒன்றிய அரசு துரோ­கம் செய்து வரு­கி­றது. புதிய நாடா­ளு­மன்ற கட்டட திறப்பு விழா மற்­றும் அயோத்தி ராமன் கோவில் குடமுழுக்கு விழா­விற்கு ஜனா­தி­பதி திர­வு­பதி முர்­முவை அழைக்­கா­மல் அவரை பா.ஜ.க. அவ­ம­தித்­தது.
நாட்­டில் உள்ள பொதுத்­துறை நிறு­வ­னங்­கள், ரயில்வே போன்­ற­வற்றை தொழி­ல­தி­பர்­க­ளி­டம் ஒப்­ப­டைக்க வேண்­டும் என்­ப­தில் பா.ஜ.க. மிக­வும் உறு­தி­யாக உள்­ளது.”
-இவ்­வாறு ராகுல் காந்தி தெரி­வித்­தார்.

No comments:

Post a Comment