ஆவணங்களில் காணப்படும் சிறு பிழைகளுக்காக பொதுமக்களை அலைக்கழிக்கக் கூடாது சார்பதிவாளர்களுக்கு பத்திரப் பதிவு துறைஉத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 12, 2024

ஆவணங்களில் காணப்படும் சிறு பிழைகளுக்காக பொதுமக்களை அலைக்கழிக்கக் கூடாது சார்பதிவாளர்களுக்கு பத்திரப் பதிவு துறைஉத்தரவு

சென்னை, மே 12- பத்திரப் பதிவின் போது சிறிய பிழைகளுக்கு கூட மக்களை பதிவுத்துறை அலைக்கழிப்பதாக புகார்கள் வைக்கப்படும் நிலையில் இது தொடர் பாக சார்பதிவாளர்க ளுக்கு பத்திரப் பதிவுத் துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
சொத்து பத்திரம் என் பது மிகவும் கவனமாக கையாள வேண்டிய விஷ யம். அதில் மூல ஆவணத் தின் விவரங்கள், தேதி, பத்திர எண், சொத்து விவரம், சொத்தின் விஸ் தீரணம், சர்வே எண்கள், உட்பிரிவு எண், கிராம எண், பெயர், பிளாக் எண் போன்றவை சரி யாக குறிப்பிடட்டிருக்க வேண்டும்.

இதேபோல் முழுப் பெயர், அடையாள அட்டை, குடும்ப அட்டையில் உள்ள முகவரி, சொத் தினை விற்பனை செய்த வரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள், அவரது அடையாள அட்டை மற்றும் மூல ஆவணத்தில் உள்ள விவரங்கள் சரி யாக உள்ளதா என்பதை நீங்கள் கண்டிப்பாக கவ னிக்க வேண்டும். ஏனெ னில் இவற்றில் ஏதேனும் ஒன்று சரியாக குறிப்பிடா மல் தவறுதலாக குறிப் பிட்டிருந்தால் அது உங் களுக்கு சிக்கல் ஆகிவிடும். குறிப்பாக தட்டச்சு காரணமாகவோ, பழைய எண், புதிய எண், குழப் பத்தினாலோ, லே அவுட் பெயர் மாறினாலோ பின்னாளில் யாருக்கா வது விற்கும் போது பெரிய குழப்பம் ஏற்படும்.. எனவே பத்திர பதிவின் போது தவறு இல்லாமல் சரிபார்த்துக்கொள்வது அவசியம்.

அதேவேளையில் சிறிய பிழைகளுக்கு கூட மக்களை பதிவுத்துறை அலைக்கழிப்பதாக அடிக்கடி குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இந்த நிலையில், பத்திரப் பதி வின் போது சிறிய பிழை களுக்கு கூட மக்களை பதிவுத்துறை அலைக் கழிப்பதாக சொல்லப் படும் நிலையில், சார்பதி வாளர்களுக்கு பத்திரப் பதிவுத்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள் ளது. ஆவணப்பதிவு தொடர்பாக தமிழ்நாடு அரசின் பத்திரப்பதிவு துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட பதிவாளர்கள் மற்றும் சார்பதிவாளர் களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில் அவர் கூறியி ருப்பதாவது:- பத்திரப் பதிவு அலுவலகங்களில் ஆவணத்தாரர்கள் தாக்கல் செய்யும் ஆவ ணங்களில் காணப்படும் சிறு பிழைகளுக்காக அலைக் கழிக்கப்படுவ தாக தொடர்ந்து புகார் கள் வருகின்றன. அதே போல் மக்கள் தாக்கல் செய்யும் ஆவணங்கள் தொடர்பாக பதிவு அலு வலர்களுக்கு இடையே நடைபெறும் கடிதப் போக்குவரத்து குறித்தும் தகவல் தெரிவிப்ப தில்லை.

இதற்கு சான்றாக வங்கி ஒன்றால் எழுதப் பட்ட விற்பனை ஆவ ணத்தை ஒரு சார்பதி வாளர், இது தனது அலுவலக வரம்பிற்கு வராது என்று வேறோரு சார்பதிவாளர் அலுவல கத்திற்கு அந்த ஆவ ணத்தை அனுப்பி வைத்து விட்டார். ஆனால் இந்த தகவலை சம்பந்தப்பட்ட வங்கி, ஆவணத்தாரர்கள் என யாரிடமும் சொல்ல வில்லை. இந்த பிரச்சினை தொடர்பாக தொடரப் பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தனது கண்டனத்தை பதிவு செய்து உள்ளது.
எனவே இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத் தில் நடக்க கூடாது. எனவே சார்பதிவாளர் கள் பதிவுக்கு தாக்கல் செய்யும் ஆவணங்கள் குறித்த நிலையினை ஆவ ணத்தாரர்களுக்கு உரிய முறையில் தெரிவிக்க வேண்டும். அதே போல் பத்திரங்களில் சிறு பிழை களுக்காக பொதுமக் களை அலைகழிக்க கூடாது”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment