இவி எம் தரவுகளை மூன்று ஆண்டு பாதுகாக்க வேண்டும் : கபில்சிபில் வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 25, 2024

இவி எம் தரவுகளை மூன்று ஆண்டு பாதுகாக்க வேண்டும் : கபில்சிபில் வலியுறுத்தல்

featured image

புதுடில்லி, மே 25 வாக்குப்பதிவு இயந்திரங்களின் (இவிஎம்) தரவு களை 3 ஆண்டுகள் வரை பாது காக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தர விட வேண்டும் என்று உச்ச நீதிமன் றத்திடம் மாநிலங்களவை உறுப்பினர் கபில்சிபல் வலியுறுத் தியுள்ளார்.

தற்போது வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள தரவுகள் தேர்தல் முடிவுக்குப் பிறகான ஒரு மாத கால அளவுக்கு மட்டுமே பாதுகாக்கப்படுகின்றன. இந்நிலையில் அந்தப் பதிவுகள் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை பாதுகாக்க வேண் டும் என்றும் இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் கபில்சிபல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள தரவுகளை பாதுகாப்பது மிகவும் அவசியம். அந்தத் தரவுகள் தான், எத்தனை மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியதுஎத்தனை மணிக்கு முடிவடைந் தது, எத்தனை மணிக்கு வாக்கு செலுத்தப்பட்டது உள்ளிட்ட விவரங்களைத் தரக் கூடியது. இவை முக்கியமான ஆதாரங்கள்.

எனவே, இவற்றை நாம் பாதுகாக்க வேண்டும். அதே போல், வாக்குப்பதிவு தொடர்பான விவரங்களை வாக்கு எண்ணிக் கைக்கு முன்பாக மக்களுக்கு தெரியப்படுத்துவது அவசியம். இது தொடர்பான வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment