பிஜேபி உட்கட்சி விவகாரத்தில் பாஜக பிரமுகர் மீது தாக்குதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 12, 2024

பிஜேபி உட்கட்சி விவகாரத்தில் பாஜக பிரமுகர் மீது தாக்குதல்

திருவாரூர், மே 12 திருவாரூர் அருகே உட்கட்சித் தகராறில் பாஜக பிரமுகர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத் தில், அக்கட்சியின் மாவட்டத் தலை வர் நேற்று (11.5.2024) கைது செய்யப் பட்டார்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகேயுள்ள காவனூரைச் சேர்ந்தவர் மதுசூதனன்(45). பாஜக மாவட்ட விவசாயப் பிரிவு முன்னாள் மாவட்டத் தலைவரான இவரை, குடவாசல் அருகேயுள்ள ஓகை பகுதியில் கடந்த 8-ஜிம் தேதிஒரு கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு, தப்பிவிட்டது. இதில் பலத்தகாயமடைந்த மதுசூதனன், தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவதூறு கருத்துகள்: இதனி டையே, மதுசூதனன் மனைவி ஹரிணி கொடுத்த புகாரின் பேரில், குடவாசல் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வந்தனர். இதில், திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர், மாவட்டச் செயலாளர் செந்திலரசன் ஆகியோர் குறித்துசமூக வலைதளங் களில் மதுசூதனன் அவதூறாக கருத் துகளை பதிவிட்டு வந்ததையடுத்து, அவர் தாக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக கும்பகோணம் தாராசுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன், காட்டூர் பகுதியைச் சேர்ந்தஜெகதீசன் ஆகி யோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும், தேடப்பட்டு வந்த பாஜக மாவட்டத் தலைவர் பாஸ்கரை காவல்துறையினர் நேற்று கோயம் புத்தூரில் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment