ஸநாதனத்தை எதிர்த்து சமூகநீதிக்கான ஜனநாயகப் போர்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 11, 2024

ஸநாதனத்தை எதிர்த்து சமூகநீதிக்கான ஜனநாயகப் போர்...!

பொன். பன்னீர்செல்வம்
காரைக்கால்

எப்போதெல்லாம் இந்தியாவைப் புரிந்து கொள்ள ஆசைப்படுகிறேனோ அப்போ தெல்லாம் நான் தமிழ்நாட்டை பார்க்கிறேன் – இந்தியாவை பிரதிபலிக்கும் அற்புதமான கண் ணாடியாக தமிழ்நாடு இருக்கிறது.
சமூக நீதிப் பாதையில் எப்படி நடை போட வேண்டும் என்று நாட்டிற்கே, தமிழ்நாட்டு மக்கள்தான் தெரிய வைத்துள்ளனர். உலகிற்கு தந்தை பெரியார் போன்ற ஆளுமைகளை தமிழ்நாடு தந்துள்ளது. என்று சமூக நீதிக் கோட்பாடுகளை மிக நுட்பமாக புரிந்து கொண்ட காங்கிரசின் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கூறியிருக்கிறார். இதற்கு தான் பிரதமர் மோடி பயப்படுகிறார்.
இப்போது நடப்பது வெறும் தேர்தல் அல்ல, சமூக நீதி- சம தர்மத்துக்கும், ஸநாதன-மனு(அ)தர்மத்துக்கும் நடக்கும் ஜனநாயகப் போர்.
ஈராயிரம் ஆண்டுகளாக தோற்கடிக்கப்பட்டு நூறாண்டுகளாக தந்தை பெரியார், புரட்சியாளர் அம் பேத்கர் போன்ற சமூக நீதிக் கொள்கையாளர்களால் வெற்றி பெற்று வரும் சமூக நீதியை மீண்டும் குழி தோண்டி புதைக்க ஸநாதன – மனுதர்மம், ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. வடிவங்களில் வர்ணாசிரம முறையை நடைமுறைப்படுத்த தனது வாளை சுழற்றி வருகிறது.
தமிழ்நாட்டில் மட்டுமே ஒலித்து வந்த சமூக நீதிக் கோட்பாட்டு கொள்கைகள் இப்போது வடக்கேயும் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. சுழற்றும் ஸநாதன வாள் வீச்சை தடுக்க. சமூக நீதி கேடயத்தைத் தூக்கி பிடித்து. நூறாண்டுகளுக்கு முன்பு காங்கிரசிலிருந்த தந்தை பெரியார் அவர்கள் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி எப்படிப் பேசினாரோ அதே போல், இன்றைக்கு காங்கிரசின் இளம் தலைவராக இருக்கும் நாளைய பிரதமராகப் போகும் ராகுல் காந்தியும் தந்தை பெரியாரின் குரலாக பேசி வருவதால். காங்கிரசிலிருந்து இப்படி ஒரு குரலா என்று சங்கி கூட்டம் அலறுகிறது.
அவர்கள் எதிர்பார்க்கவில்லை – இது ராகுல் காந்தியின் குரலாக இருக்கும் என்று .!
சமூக நீதி தலை தூக்கி விடுமோ என்ற பயத்தால் அதனை மடைமாற்ற பல்வேறு யுக்திகளை கையாள்கிறார் பிரதமர் மோடி – 10 ஆண்டுகால ஆட்சியில் செய்த சாதனைகளை அவரால் சொல்ல முடியவில்லை.
தமிழ்நாடு போல் வட மாநி லங்களும் மாறிவிடுமோ என்று அஞ்சி அலறுகிறார். அதனால் எதைஎதையோ பேசி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறார்.

100 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசிலிருந்து வகுப்புவாரி உரிமைக்காக ஒரு குரல் எழுந்தது. இன்று காங்கிரசே சமூக நீதிக்கான குரலாக எழுதுகிறது. இதனைப் பார்த்து தான் பதற்றமடைகிறார் மோடி.
அவர்களுக்கு சமூக நீதி- இட ஒதுக்கீடு என்றாலே பயம். நாடெங்கும் சமூக நீதி, இட ஒதுக்கீடு பேச்சுப் பரவி விடுமோ என்று பயப்படுகிறார்.
மண்டல் ஆணையத்தின் இடஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்திய சமூக நீதிக் காவலர் வி.பி.சிங். ஆட்சியையே கவிழ்த்தவர்கள் அல்லவா இவர்கள்.

இட ஒதுக்கீடு- சமூக நீதியை பற்றி ராகுல் காந்தி அவர்கள் பேச பேச, உங்களிடம் உள்ள சொத்து, வீடு, நிலம், தங்கம் , தாலி, எருமை மாடு, இடஒதுக்கீடு இவைகளை அபகரித்து விடுவார்கள். அபகரித்து இஸ்லாமியர்களுக்கு கொடுத்து விடுவார்கள் என்று நம்மோடு இந்த நாட்டில் வாழ்ந்து வரும் இஸ்லாமியர்களை அவமானப்படுத்தி மதம் சார்ந்த பிரிவினையை பேசி வருகிறார். எனக்கு சொந்தமாக வீடு இல்லை. ஒரு சைக்கிள் கூட இல்லை என்று பரிதாபத்தை தேடுகிறார். ஒரு பிரதமர் பேசக் கூடாததை எல்லாம் பேசி வருகிறார். இப்போது புதிதாக ஒரு பொய்யை கட்டவிழ்த்து விடுகிறார் அதானியிடமும், அம்பானியிடமும் காங்கிரஸ் பணம் பெற்று இருக்கிறது என்று சொல்கிறார். யாரை வைத்து மோடியின் பிம்பம் வடிவமைக்கப்பட்டதோ அவர்களையும் தனக்கு எதிராக நிறுத்துகிறார்.

வடிவமைக்கப்பட்ட மோடி என்ற பிம்பம் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து வருவதைப் பார்த்து வேதனை அடைகிறார்.
ஆனால், ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளுக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.
டில்லியில் இருந்து இந்திய ஒன்றிய அரசை நடத்துபவர்கள் 90 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் இந்த 90 அய்.ஏ.எஸ். அதிகாரிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அய்.ஏ.எஸ். அதிகாரிகள் 3 பேர் மட்டுமே உள்ளனர். அவர்களையும் சிறிய துறைகளில் பொறுப்புக் கொடுத்து ஒரு மூலையில் உட்கார வைத்துள்ளனர்.
நிதி அமைச்சகத்தில் ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பு அய்.ஏ.எஸ். அதிகாரி கூட இல்லை. முக்கியமான அமைச்சகங்களில் ஓ.பி.சி. பிரிவினர் யாருமே இல்லை. அவர்கள் தான் பட்ஜெட்டில் ஒவ்வொரு ரூபாயையும் பகிர்ந்து அளிக்கிறார்கள்.
மூன்று ஓ.பி.சி. மூன்று தாழ்த்தப்பட்டோர், ஒரு ஆதிவாசி சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே உள்ளனர். இந்தியாவின் பட்ஜெட்டை பார்த்தால் ஒவ்வொரு 100 ரூபாயில் 6 ரூபாய் 10 பைசா மட்டுமே ஓ.பி.சி பிரிவினர், தாழ்த்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த அதிகாரிகளால் தீர்மானிக்கப்படுகிறது.

இந்தியாவில் ஓ.பி.சி எஸ்.சி, எஸ்.டி. மக்களின் எண்ணிக்கை 90 சதவிகிதம் – ஆனால் உங்கள் பங்கு நூற்றில் வெறும் 6 ரூபாய் 10 பைசா தான். டில்லியில் இருக்கும் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் தான் பட்ஜெட் நிதிதியை விநியோகிக்கிறார்கள். குஜராத்துக்கு எவ்வளவு பணம் செல்கிறது?புல்லட் ரயிலுக்கு எவ்வளவு செல்கிறது?அக்னிவீர் திட்டம் நடக்குமா நடக்காதா? தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி உதவித் தொகை எவ்வளவு வழங்கப்படும்? எத்தனை சாலைகள் அமைக்கப் படும்? எங்கெங்கு அமைக்கப்படும்? உள் கட்ட மைப்புக்கு எவ்வளவு பணம் செல்லும்? என அனைத்து முடிவுகளும் இந்த அய்.ஏ.எஸ். அதிகாரிகளால் தான் எடுக்கப்படுகின்றன.

என் கேள்வி என்னவென்றால் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 90 சதவீதம் எஸ்.சி, எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. மக்கள் உள்ளனர் ஆனால் அவர்கள் கார்ப்பரேட்டில் இல்லை. மீடியாவில் இல்லை. தனியார் மருத்துவமனைகளை நடத்தவில்லை. தனியார் பல்கலைக்கழகங்களை நடத்தவில்லை. அரசு உயர் பதவிகளில் இல்லை.
அப்படி என்றால் அவர்கள் எங்கே இருக் கிறார்கள்? விவசாயிகள், தொழிலாளர்கள், வேலை யற்ற இளைஞர்கள், சிறு வணிக உரிமையாளர்களாக இருக்கிறார்கள். எங்கும் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை.
இட ஒதுக்கீடு முறைக்கு எதிராக அவர்கள் உள்ளனர் என்று சமூக நீதியின் குரலாக தந்தை பெரியாரின் குரலாக, புரட்சியாளர் அம்பேத்கரின் குரலாக ராகுல் ஓங்கி ஒலித்து வருகிறார்.

அவர் பேசும் ஒவ்வொரு தேர்தல் கூட்டங்களிலும் இதனை வலியுறுத்தி வருகிறார். ஜாதிவாரி கணக் கெடுப்பு என்றதும் அலறி துடித்து மக்களை பயமுறுத்தி மீண்டும் வர்ணாசிரம மனு தர்ம முறையை நடைமுறைப்படுத்த பா.ஜ.க. முயல்கிறது.
10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து எந்த வளர்ச்சி திட்ட பணிகளையும் செய்யாமல் இந் தியாவின் பொருளாதாரத்தை முன்னேற்றாமல் மதம், கடவுள் என்று பஜனை பாடிவிட்டு இன்னும் அய்ந்து ஆண்டுகளை கேட்கிறார் பிரதமர் மோடி.
இந்தியாவின் பொருளாதாரத் துறை சீர்படுத்து வதற்கு முதலாவது வர்ணாசிரம முறை ஒழிய வேண்டும்.
இரண்டாவது மத சம்பந்தமான எண்ணங்கள் அகற்றப்பட வேண்டும்.
மூன்றாவது கோயில், குளம், சடங்கு, சாத்தான், சனிவிலக்கு ஆகிய எண்ணங்கள் அழிக்கப்பட வேண்டும்
என்று தந்தை பெரியார் அவர்கள் 13.09.1931இல் குடியரசு இதழில் எழுதி இருக்கிறார்.
93 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் அவர்கள் எதை ஒழிக்கச் சொன்னாரோ, எது ஒழிந் தால் நாடு முன்னேறும் என்று சொன்னாரோ, அதனை வைத்தே மதத்தையும், கடவுளையும், வர்ணா சிரமத்தையும் வைத்து தான் இப்போது பா.ஜ.க ஆட்சி செய்தது.

1925இல் உருவான ஆர். எஸ். எஸ். இன் கொள்கை திட்டத்தை 100 ஆண்டுகள் நெருங்கும் நிலையில் மீண்டும் ஆட்சிக்கு வந்து நடைமுறைப்படுத்த கடவுளையும், மதத்தையும் ஆயுதமாக கையில் எடுத்திருக்கிறது. பிரதமரும் கடவுள், மதம் பற்றியே பேசி வருகிறார். இந்தத் தேர்தலில் நாம் இதனை கட்டாயம் ஒழித்தாக வேண்டும்.
காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று சொன்னவர்கள். இன்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீட்டை பறித்து விடுவார்கள், இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள் . இரண்டு எருமை மாடு இருந்தால் ஒரு எருமை மாட்டை பிடுங்கிக் கொள்வார்கள் என்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிடும் என்று தெரிவதால் மக்களை திசை திருப்ப எதையெதையோ இல்லாததை எல்லாம் சொல்லி வருகிறார்.
இட ஒதுக்கீட்டில், ஜாதி வாரி கணக்கெடுப்பில் பா.ஜ.க . என்ன திட்டம்? வைத்திருக் கிறது என்று வெளிப்படையாக மக் களுக்கு சொல்ல ஏன் பயப்படுகிறது?

ஜாதிவாரி கணக்கெடுப்பு, இட ஒதுக்கீடு, சமூக நீதி என்று ராகுல் காந்தி பேசுவதை பார்த்து பார்த்து பயப்படும் பா.ஜ.க. ணிகீஷிஇல் 10 சதவிகித இட ஒதுக்கீட்டை ஒரே நாளில் எப்படி கொண்டு வந்தது?
இது யாருக்கு பயன்படுகிறது ?
90 சதவிகிதமக்களுக்கா?அல்லது 5 சதவிகித மக்களுக்கா?

எப்போதெல்லாம் இந்தியாவை புரிந்து கொள்ள ஆசைப்படுகிறேனோ அப்போதெல்லாம் நான் தமிழ் நாட்டை பார்க்கிறேன். இந்தியாவை பிரதிபலிக்கும் அற்புதமான கண் ணாடியாக தமிழ்நாடு இருக்கிறது.
சமூக நீதிப் பாதையில் எப்படி நடை போட வேண்டும் என்று நாட்டிற்கே தமிழ்நாட்டு மக்கள்தான் தெரிய வைத்துள்ளனர்.
உலகிற்கு பெரியார் போன்ற ஆளுமைகளை தமிழ்நாடு தந்துள்ளது. என்று ராகுல் காந்தி தமிழ்நாட்டைப் பற்றியும், சமூக நீதியை பற்றியும், தந்தை பெரியாரைப் பற்றியும் உணர்ந்து கொண்டு தனது கருத்தை சொல்லி இருக்கிறார்.
குறிப்பிட்ட ஒரு பகுதியினருக்கு மட்டுமே உள்ள மனுதர்ம – ஸதாதன பா.ஜ.க. தோற்கடிக்கப்பட வேண்டும்.
அனைவருக்கும் அனைத்தும் என்ற சமூக நீதி-சமத்துவத்தை முழங்கி வரும் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். நாடு முழுவதும் சமூக நீதி பரவ வேண்டும்.

No comments:

Post a Comment