இதுதான் கடவுள் சக்தியா? கோவிலுக்கு சென்று திரும்பிய பக்தர்கள் 6 பேர் பலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 12, 2024

இதுதான் கடவுள் சக்தியா? கோவிலுக்கு சென்று திரும்பிய பக்தர்கள் 6 பேர் பலி

போபால், மே. 12 மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த குடும்பத்தினர் 12 பேர் சியோபூரில் உள்ள மலைக்கோவிலான துர்க்கையம்மன் கோவிலுக்கு காரில் சென்று திரும்பியபோது. மலை அடிவாரத்தை நோக்கி அவர்களுடைய கார் வேகமாக சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப் பாட்டை கார் இழந்தது. இதனால் நிலைதடுமாறி சாலை நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவர் மீது அதிவேகத்தில் சென்ற கார் மோதி விபத்திற்குள்ளானது. இதில் காரின் முன்பக்கம் அப்பளம்போல் நொறுங்கியது. இந்தவிபத்தில் 3 பேர் சம்பவ இடத் திலேயே உடல் நசுங்கி ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைத்த 9பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

No comments:

Post a Comment