அர்ச்சகர்களின் யோக்கியதை இளம்பெண்ணை மோசம் செய்த வழக்கில் தலைமை அர்ச்சகர் உள்ளிட்ட 5 பேருக்கு அழைப்பாணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 24, 2024

அர்ச்சகர்களின் யோக்கியதை இளம்பெண்ணை மோசம் செய்த வழக்கில் தலைமை அர்ச்சகர் உள்ளிட்ட 5 பேருக்கு அழைப்பாணை

மோசடி அர்ச்சகருக்கு ‘லுக் அவுட் நோட்டீஸ்’
சென்னை, மே 24- தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரியும் பெண் ஒருவர், சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி என்பவர்மீது விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்த புகாரில், மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு சாமி கும்பிட அடிக்கடி சென்ற எனக்கு, கோவிலில் பூசாரியாக பணியாற்றி வரும் கார்த்திக் முனுசாமி என்பவர் பழக்கமானார். நாங்கள் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், சொகுசு காரில் அவரது வீட்டுக்கு அழைத்து சென்ற கார்த்திக் முனுசாமி, தீர்த்தம் எனக்கூறி திரவம் ஒன்றை கலந்து கொடுத்து குடிக்க கொடுத்தார்.

அதை குடித்த சில நிமிடங்களில் நான் மயங்கிய நிலையில், பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். பின்னர் ஆசைவார்த்தை கூறி அம்மன் கோவிலில் தாலி கட்டி என்னை திருமணம் செய்து கொண்டார். இருவரும் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்த நிலையில், தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று தனது கருவை கலைத்து விட்டதாகவும், அதன் பிறகு தன்னை பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாகவும் கூறியிருந்தார். இது தொடர்பாக விருகம்பாக்கம் மகளிர்

காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தலைமறைவாக உள்ள கார்த்திக் முனுசாமி தப்பிச் செல்லாமல் இருக்க காவல்துறையினர் ‘லுக் அவுட் நோட்டீஸ்’ வழங்கியுள்ளனர். மேலும், தலைமை அர்ச்சகர் காளிதாஸ் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கோவில் பணியாளர்களுக்கு காவல்துறையினர் அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.

No comments:

Post a Comment