தமிழ்நாடு அரசின் தாயுமானவர் திட்டம் 5 லட்சம் ஏழைக் குடும்பங்களை மீட்டெடுக்கும் ஏற்பாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 23, 2024

தமிழ்நாடு அரசின் தாயுமானவர் திட்டம் 5 லட்சம் ஏழைக் குடும்பங்களை மீட்டெடுக்கும் ஏற்பாடு

featured image

சென்னை, மே23- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் ‘நான் முதல்வன் திட்டம்’ உள் பட பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் கடந்த பட் ஜெட் தொடரின் போது தமிழ் நாட்டில் வறுமையை குறைக்கும் விதமாக முதலமைச்சரின் தாயு மானவர் திட்டம் தொடங்கப் படும் என்று அறிவிக்கப்பட்டது.

2024_-2025-ஆம் நிதியாண்டுக் கான நிதிநிலை அறிக்கையை அப்போது தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இந்த திட்டத்துக்காக ரூ.27,922 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது என்றும் அடுத்த 2 ஆண்டுகளில் இது ஏறக்குறைய 5 லட்சம் ஏழைக் குடும்பங்களை வறுமை யில் இருந்து உயர்த்த இந்த திட்டம் உதவும் என்றும் தெரிவித்திருந்தார்.

தமிழ்நாட்டில் அறிமுகப் படுத்தப்பட்ட பல சமூக நல திட்டங்களால் வறுமையை குறைப்பதில் மிகச்சிறந்த முன் னேற்றம் ஏற்பட்டு வந்தாலும் தாயுமானவர் திட்டம் மூலம் மிகவும் வாடிய நிலையில் வசிக்கும் ஏழை குடும்பங்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றம் அடைய செய்வதே இத்திட்டத் தின் குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த திட்டத்தை அடுத்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தமிழ்நாட்டில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் வறுமையை குறைப்பதில் மிகச்சிறந்த முன் னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இதை அங்கீகரிக்கும் வகையில் ஒன்றிய அரசின் ‘நிட்டி ஆயோக்’ சமீபத்தில் வெளியிட்ட அறிக் கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களின் சதவீதம் தமிழ்நாட்டில் 2.2 சதவீதம் மட் டுமே என்று குறிப்பிடப்பட்டி ருந்தது. ஆனாலும் வாடிய நிலையில் வாழும் ஏழை குடும்பங்களை கண்டறிந்து அவர்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதற்காகவே முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் அறிவிக் கப்பட்டுள்ளது.

ஆதரவற்றோர், தனித்து வசிக்கும் முதியோர், பெற் றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறப்பு குறைபாடு உடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் என சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் அடை யாளம் காணப்படுவார்கள்.
அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மட்டு மின்றி, கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.
அரசிடம் உள்ள தரவுகள், கள ஆய்வு மக்கள் பங்கேற்புடன் கலந்துரையாடல், கிராம சபை ஆகியவற்றின் வழியாக மாநிலம் முழுவதும் மிகவும் ஏழ்மையில் உள்ள குடும்பங்கள் கண்டறி யப்பட உள்ளது.

இத்திட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்கேற்பு உறுதி செய்யப்படும். அது மட்டுமின்றி முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் ஏழைக் குடும்பங்களை எந்த அடிப்படையில் எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பது பற்றி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு பயிற்சியும் அளிக்க இருக்கிறோம்.

அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்த பிறகு இந்த திட்டத்துக்கான வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். அதன் பிறகு இந்த திட்டம் முழுமையாக செயல் பாட்டுக்கு வரும்.
-இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment