உரத்தநாடு தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் 50 விடுதலை சந்தாக்கள் - கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களிடம் வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 27, 2024

உரத்தநாடு தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் 50 விடுதலை சந்தாக்கள் - கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களிடம் வழங்கல்

featured image

உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலைக்கு உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழகத்தலைவர் த.செகநாதன் தலைமையில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தனக்கு ஒதுக்கிய 50 ஓராண்டு விடுதலை சந்தாக்களை நிறைவு செய்து 26.5.2024 அன்று உரத்தநாட்டில் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் இல்ல மணவிழாவில், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் ஒக்கநாடு மேலையூர் கட்டடப் பொறியாளர் ப.பாலகிருட்டிணன் 1,00,000/ரூபாயினை வழங்கினார். உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.செயக்குமார், மாநில திராவிட மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூர பாண்டியன், பெரியார் வீர விளையாட்டுக் கழக மாநில செயலாளர் நா.இராமகிருட்டிணன், தலைமைக்கழக அமைப்பாளர் க.குருசாமி, காப்பாளர் மு.அய்யனார், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்டத்தலைவர் பி.ஜி.இராசேந்திரன்,மாவட்ட இணைச்செயலாளர் வடசேரி தீ.வ.ஞானசிகாமணி, மாவட்ட துணைச்செயலாளர் அ.உத்திராபதி, ஒன்றிய செயலாளர் மாநல்.பரமசிவம், ஒன்றிய துணைச்செயலாளர் புரபசர் க.சுடர்வேந்தன், ஒன்றிய விவசாய அணி தலைவர் மா.மதியழகன்,அமிர்தா புத்தகநிலையம் மா.திராவிடச்செல்வன், ஒன்றிய இளைஞரணி தலைவர் ரெ.இரஞ்சித்குமார், வழக்குரைஞர் க.மாரிமுத்து, பெரியார் நகர் சக்திவேல் உள்ளனர்.
கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் மாவட்ட இணை செயலாளர் வடசேரி ஞானசிகாமணி விடுதலை சந்தா தொகையாக ரூ.18000/- வழங்கினார். உரத்தநாடு நகர திராவிடர் கழக இளைஞரணி பொறுப்பாளர் மாதவன் அவர்கள் விடுதலை சந்தா தொகை ரூ.1000/- வழங்கினார்.

தஞ்சை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி. இராஜேந்திரன் விடுதலை சந்தா அளிப்பு

தஞ்சை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பி.ஜி.இராஜேந்திரன் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் ஜூன் 1 அன்று
90ஆவது பிறந்தநாள் காணும் விடுதலைக்கு 10 ஆண்டு சந்தா ரூ 20,000 வழங்கி மகிழ்ந் தார். உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர்இரா.ஜெயக்குமார் (26-05-2024,உரத்தநாடு)

மனிதநேயர், வழக்குரைஞர் எஸ்.எஸ்.ராஜ்குமார் அய்ந்து விடுதலை சந்தா தொகை ரூ.10 ஆயிரத்தினை தஞ்சை தெற்கு ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் நெல்லுப்பட்டு ராமலிங்கத்திடம் வழங்கினார். (தஞ்சாவூர்)

No comments:

Post a Comment