100 விடுதலை சந்தாக்கள் வழங்கிட கோவை மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 12, 2024

100 விடுதலை சந்தாக்கள் வழங்கிட கோவை மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

featured image

கோவை,மே 12– கோவை மாவட்ட கழகம் கலந்துரையாடல் கூட் டம் 11.5.2024 அன்று காமராஜ் நகரில் உள்ள கண்ணப்பன் அரங்கில் மாவட்ட தலைவர் ம.சந்திர சேகர் தலைமையில் நடை பெற்றது.

மாநில இளைஞரணி செய லாளர் நாத்திகபொன்முடி, மாவட்ட செயலாளர் வழக்கு ரைஞர் ஆ. பிரபாகரன், மாநகர தலைவர் செந்தில்நாதன், மாநகர செயலாளர் புலிய குளம் க.வீரமணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் கருத்துரை வழங்கினார்

மாவட்ட துணைத் தலைவர் மு.தமிழ்ச்செல்வம், பீளமேடு பகுதி கழக செய லாளர் மா.ரமேஷ், தொழிலா ளர் அணி செயலாளர் ஆர் வெங்கடாசலம், ஜி.டி.நாயுடு நினைவு பெரியார் படிப்பகம், பெரியார் புத்தக நிலைய காப்பாளர் அ.மு.ராஜா, தோழர் ந.குரு, ஆவின் சுப் பையா ஆகியோர் பங்கேற்றனர்

நிறைவாக கூட்டத்தில், கோவை பீளமேடு பகுதி கழக தலைவர் முருகானந்தம் அவர் களின் தாயார் வள்ளியாத்தாள் (வயது 93)மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தும்,24.3.2024 அன்று தஞ்சாவூரில் நடைபெற்ற திரா விடர் கழக பொதுக்குழு தீர் மானங்களை ஏற்று செயல் படுத்துவது என வும், உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு – இன உரிமை மீட்பு ஏடான விடுத லைக்கு கோவை கழக மாவட் டம் சார்பில் 100 விடுதலை சந்தாக்களை திரட் டித் தருவது எனவும், சுயமரி யாதை இயக்க நூற்றாண்டு குடிஅரசு ஏடு நூற்றாண்டு விழா கூட்டங் களை கோவை மாவட்டம் முழுவதும் பரவ லாக நடத் துவது உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப் பட்டன.

No comments:

Post a Comment