பேரிடர் நிதியை தராத பிஜேபி ஆட்சிக்கு தமிழ்நாடு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 1, 2024

பேரிடர் நிதியை தராத பிஜேபி ஆட்சிக்கு தமிழ்நாடு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்

featured image

டி.ஆர்.பாலு எம்.பி., அறிக்கை

சென்னை,மார்ச்1 தி.மு.கழகப் பொருளாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு விடுத்துள்ள அறிக்கை வருமாறு,
அரசுமுறைப் பயணமாகத் தமிழ்நாட்டுக்கு வந்து, அரசியல் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு, தாம் பிரதமர் என்ப தையே மறந்து, அரசியல் அவதூறு களை அள்ளி இறைத்துவிட்டுப் போயிருக்கிறார் பிரதமர் நரேந் திரமோடி.
திருப்பூர் கூட்டத்தில் ஜெய லலிதாவை வானளாவப் புகழ்ந்தும், திருநெல்வேலி கூட்டத்தில் தி.மு.க. வைக் கடுமையாக விமர்சித்தும் பேசிவிட்டுப் போயிருக்கிறார் பிர தமர்.
2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, ஜெயலலிதா ஆட்சியைப் பற்றி, ’தமிழ்நாட்டில் லஞ்ச லாவண்யம் தலைவிரித் தாடுகிறது. இந்த லஞ்சத்தினால் தமிழ்நாடே முற்றிலும் பாதித்துப் போய் இருக்கிறது’ என ஓசூரில் நின்று கடுமையாக விமர்சித்த மோடிதான், இன்றைக்குப் பல்லடத் தில் பல்டி அடித்திருக்கிறார்.
2014-ஆம் ஆண்டு தன்னை குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி நாயகனாகக் காட்டிக் கொண்ட நரேந்திரமோடி பிரதமர் வேட் பாளராக அறிவிக்கப்பட்டார். அப் போது, தமிழ்நாட்டைவிட குஜராத் எந்த வகையில் வளர்ந்துவிட்டது என்று சொல்லி, ‘மோடியா? இந்த லேடியா?’ என்று கேட்டவர் ஜெய லலிதா. அத்தகைய மோடி இன்று தன்னைப் புகழ்வதைப் பார்த்து என்ன சொல்வது? ஜெயலலிதாவை வைத்து, தமிழ்நாட்டில் ஓட்டு வாங்க நினைக்கிறார் மோடி. அவ ரிடம் சொந்தச் சரக்கு ஏதுமில்லை என்பதற்கு இதுவே சான்று.

தி.மு.க அரசைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் பிரதமர். தி.மு.க மீதும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் மீதும் பிரதமருக்கு இவ்வளவு கோபம் ஏன் என்பது புரிந்து கொள்ள முடியாதது அல்ல. தனக்கு எதிரியே இல்லை என்ற இறுமாப்பில் இருந்த பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத் தையும் இணைத்து ‘இந்தியா’ கூட்டணி அமைக்க அடித்தளம் அமைத்தவர் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் என்பதுதான் பிர தமர் மோடியின் கோபத்துக்குக் காரணம்.
பின்னலாடை வர்த்தகச் சந்தைக் கான வாசலை வங்கதேசத்துக்குத் திறந்துவிட்டு, திருப்பூரை வஞ்சித்த மோடி, கொங்கு மண்ணின் பெரு மையை எப்படிப் பேச முடிகிறது?
வங்கதேசத்துக்குப் பின்ன லாடை மூலப் பொருட்கள் 60 விழுக்காடு இந்தியாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. அங்கே உற்பத்தியாகும் துணி இந்தியாவிற்கே விற்கப்படுகிறது. வங்கதேச மண்ணுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்த மோடி அரசு, திருப்பூருக்குச் செய்தது அநீதி தானே! பின்னலாடை வர்த்தகத்தை நசுக்கிவிட்டு, ’’தொழில்துறையில் கொங்கு மண் முக்கியப் பங்காற்று கிறது’’ எனக் கூசாமல் பொய் சொல்கிறார்.

காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது…
“காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோது தமிழ்நாட் டிற்கு ஒன்றும் செய்யவில்லை” எனப் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. 2004 – மார்ச் 2013 வரை டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சியில் அங்கம் வகித்தபோது, தமிழ் செம்மொழி பிரகடனம், மிகப் பெரிய போக்குவரத்து மேம்பாலங்கள், சேலத்தில் புதிய இரயில்வே கோட்டம், தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மய்யம், சேலம் அரசினர் மோகன் குமார மங்கலம் மருத்துவக் கல்லூரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவக் கல் லூரியாக மேம்பாடு, திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம், சென் னையில் கடல்சார் தேசிய பல் கலைக்கழகம், இந்தியாவிலேயே முதல் முறையாக வளர்ந்த நாடு களுக்கு இணையான 3ஜி தகவல் தொழில்நுட்பத் திட்டம், 50 காசு செலவில் இந்தியா முழுவதும் தொலைபேசியில் பேசும் வசதி என ஒன்பதாண்டு காலத்தில் தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் பல திட்டங்களைத் தி.மு.க கொண்டு வந்தது.
இத்தகைய சிறப்புத் திட்டம் ஏதாவது தமிழ்நாட்டுக்கு பா.ஜ.க அரசு கொண்டு வந்ததாகப் பட் டியல் போட முடியுமா? ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை 2015-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2019-ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் ஒரு செங்கல் வைக்கப்பட்டது. மறு செங்கல் இதுவரை வைக்கப்பட வில்லை. மதுரையில் ஒரே ஒரு எய்ம்ஸ் கூட திறக்க முடியாத உங்களால் மதுரைக்கு எப்படி வர முடிகிறது? கூச்சமாக இல்லையா?

நிவாரண நிதி….
பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒரு பைசாவைக்கூடத் தமிழ்நாட்டிற்குத் தரவில்லை. வெள்ளம் பாதித்த தூத்துக்குடிக்கும் திருநெல்வேலிக்கும் வெறும் கையோடு வந்து முழம் போடு கிறார்கள். வெள்ளம் பாதித்த பகுதியை மேம்படுத்த 37 ஆயிரம் கோடி நிதி கேட்டோம். அதில் கொஞ்சம் கூட தரவில்லை. தர மறுத்த நீங்கள் அது பற்றிய கூச்சமே இல்லாமல் தூத்துக்குடிக்கும் திரு நெல்வேலிக்கும் எப்படி வரு கிறீர்கள்?
தமிழ்நாடு கொடுக்கும் ஒரு ரூபாய்க்கு வெறும் 29 பைசா மட் டுமே வழங்குகிறது ஒன்றிய அரசு. ’29 பைசா மோடி’ தமிழ்நாட்டுக்குக் கொடுத்தது என்ன? சில திருக்குறள் களும் பாரதியார் கவிதைகளும் மட்டும்தானே!
நெல்லையில் ‘அல்வா’வை நினை வூட்டி இருக்கிறீர்கள். பேரிடர் நிதியைக் கூட தராமல் ’அல்வா’ கொடுக்கும் மோடி ஆட்சிக்கு இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் ‘அல்வா’ கொடுப் பார்கள்.

இந்தியாவின் முன்னேற்றத்தைப் பேசுவதைவிட, ‘இந்தியா’ கூட்டணி யின் முன்னேற்றத்தைக் கண்டு தாங்க முடியாமல் மணிக்கொரு முறை இந்தியா கூட்டணிக் கட்சி களையும் அதன் தலைவர்களையும் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்.
பொய்களை சொல்லவும் ஏமாற் றத்தைத் தூண்டவும்தான் பிரதம ருக்கு அதிகாரம் தரப்படுகிறதா? மாநிலங்களை ஒடுக்குவதில் ஹிட் லராகவும், பொய்களைப் புனை வதில் கோயபல்ஸாகவும் என இரண் டுமாகவே ஆகிவிட்டார் அவர்.
“ஒன்றிய அரசுக்கு ஒத்துழைப்பு தராத ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது’’ என்கிற பொய்யைச் சொல்லியிருக்கிறார் பிரதமர் மோடி. ஜி.எஸ்.டி நிதி முதல் பேரிடர் நிதி வரை தராத ஒன்றிய அரசின் ஏமாற்று வேலையைத் திமுக தோலுரிப்பதால் ’’ஒன்றிய அரசுக்கு ஒத்துழைப்பு தராத ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது’’ எனப் பொய்யைச் சொல்லியிருக்கிறார்.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம் கொடுத்தது தமிழ் நாடு அரசுதான். அமைக்காமல் ஏமாற்றியது யார்? மெட்ரோ இரண் டாம் கட்டப் பணிகளுக்கு அனுமதி கொடுக்காமலும், நிதி கொடுக்கா மலும் ஏமாற்றுவது யார்?

திமுக ஒன்றிய அரசில் அங்கம் வகித்தபோது தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சி நடைபெற்ற நேரத்தில்தான் 1,650 கோடி ரூபாய்ச் செலவில் சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையே பறக்கும் சாலைத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு அந்தத் திட்டத்தை முடக்கினார். மு.க. ஸ்டாலின் அரசு அமைந்த பிறகு அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முயற்சிகள் எடுத்துப் பணிகள் இப்போது நடந்து வருகின்றன. அத்தகைய தி.மு.க அரசின் மீதுதான் ’’ஒன்றிய அரசுக்கு ஒத்துழைப்பு தராத ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது’’ எனச் சொல்லியிருக்கிறார் பிரதமர் மோடி.
’’தி.மு.க.வை இனிப் பார்க்க முடியாது. இனித் திமுக எங்குத் தேடினாலும் கிடைக்காது’’ எனச் சொல்லியிருக்கிறார் பிரதமர் மோடி. ’’திமுக அழிந்து போகும். தலைதூக்காது’’ என திமுக உருவான 1949-ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 74 ஆண்டு காலமாகப் பலர் பேசிக் கடந்து சென்று கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், தி.மு.க என்ற இமயமலை இன்றும் வரலாற்றில் நிமிர்ந்து நின்று கொண்டுதான் இருக்கிறது.
தி.மு.க.வையே இல்லாமல் ஆக்கி விடுவாராம். சவால் விட்டுள்ளார். இப்படிச் சொன்னவர்கள் எல்லாம் வரலாற்றில் காணாமல் போய்விட் டார்கள். அந்த வரிசையில் அவரும் விரைவில் இணைந்துவிடத்தான் போகிறார் என்று எச்சரிக்கிறேன்.
-இவ்வாறு மக்களவை உறுப் பினர்கள் டி.ஆர்.பாலு குறிப்பிட் டுள்ளார்.

No comments:

Post a Comment