தமிழில் மொழிபெயர்ப்பது தொடர்பான குழுக் கூட்டம்! தமிழ் வளர்ச்சித் துறை நடத்தியது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 18, 2024

தமிழில் மொழிபெயர்ப்பது தொடர்பான குழுக் கூட்டம்! தமிழ் வளர்ச்சித் துறை நடத்தியது!

featured image

அண்ணல் அம்பேத்கர் படைப்புகள்
தமிழில் மொழிபெயர்ப்பது தொடர்பான குழுக் கூட்டம்!
தமிழ் வளர்ச்சித் துறை நடத்தியது!

சென்னை, பிப். 18- அண்ணல் அம்பேத்கர் அவர்களின் ஆக்கங்க ளைத் தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் எளிய தமிழில் மொழிபெயர்த்து மலிவு விலையில் வெளியிடல் தொடர் பான குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தியாவில் மக்கள் களத்தி லும், அறிவுசார் துறைகளிலும் அரசு சார்ந்த அமைப்புக்களின் மூலமாகவும், மக்களாட்சியைக் காக்க இருபதாம் நூற்றாண்டில் இடையறாத போராட்டம் நிகழ்த் திய அறிவாளுமை அண்ணல் அம்பேத்கர், சமூகத்தைப் பீடித் துள்ள முடைநாற்றம் என அறியப் பட்ட ஜாதீயக் கட்டமைப்புக்கும், தீண்டாமை என்னும் பஞ்ச மாபா தகச் செயலுக்கும் எதிராகச் சமரச மற்ற தாக்குதல் தொடுத்து, அவை பற்றிய தமது ஆழமான, கூர்மை யான, தெளிந்த ஆய்வுகளையும் முடிவுகளையும் அறிவாக்கங்களா கப் படைத்தார். ஜாதி என்னும் முடைநாற்றம் நீக்க வந்த கற்பூரப் பெட்டகமாகத் திகழ்பவை அண் ணலின் படைப்பாக்கங்களாகும்.

சிக்கலைக் களையாமல், சிக் கலை அதன் வேரோடும், வேரடி மண்ணோடும் களையும் உத்தி களைத் தம் படைப்புக்களில் வடித் துத் தந்த அண்ணல் அம்பேத்கர், இந்தியா சமூக விடுதலையை அடைவதற்கானப்பாதையாக அரசமைப்புச் சட்டத்தை இயற்று வதில் பெரும் பங்காற்றினார்.

அரசு என்ற கட்டமைப்பின் துணை கொண்டே, தீண்டத்தகாத வர் எனச் சிலரால் ஒதுக்கி வைக்கப் பட்ட மக்களின் உரிமைக்காகவும், பெண்கள், சிறுபான்மையினர், பிற்படுத்தப் பட்டோர் ஆகியோ ரின் உரிமைகளுக்காகவும், தன் மானத்திற்காகவும் தனது சட்டப் புலமையைப் பயன்படுத்தி அல் லும் பகலும் அயராது உழைத்த பல்துறை வல்லுநரான அண்ணல் அம்பேத்கர் இந்திய ரூபாய், வங்கித்துறை வரலாறு முதலான இந்தியப் பொருளாதாரச் சிக்கல் கள் குறித்தும், மாநில உரிமைகள் குறித்தும், பாகிஸ்தான் பிரிவினை போன்ற சிக்கல்கள் குறித்தும் தம் படைப்பாக்கங்களில் அறிவார்ந்த கருத்தாக்கங்களை முன்வைத்துள் ளார்.

அண்ணலின் படைப்பாக்கங் கள் அனைத்தும் ஆங்கிலத்திலும், மராத்தி மொழியிலும் எழுதப்பட் டவை.
அவற்றுள் பல அவர் வாழும் காலத்திலேயே வெளிவந்தவை. சில அவரது கையெழுத்துப் படி களில் இருந்து பின்னர் வெளியிடப்பட்டவை. இன்னும் சில, மும்பை சட்டமன்றத்திலும், ஆங் கில ஆட்சியாளர் அவையிலும், அரசியல் நிர்ணய அவையிலும், இந்திய நாடாளுமன்றத்திலும் அண்ணலின் உரைகளாகவும், வினாக்களுக்கு அவர் ஈந்த விடை களாகவும் அரசுப் பதிவேடுகளி லேயே புதைந்து கிடந்தன.

இவற்றோடு அவர் எழுதி வெளிவந்த பத்திரிகைக் கட்டுரை களையும் மொத்தமாகத் திரட்டித் தொகுத்து 1979இல் மராட்டிய மாநில அரசு ஆங்கிலத்தில் 37 தொகுதிகளாக வெளியிட்டது.
இந்த 37 தொகுதிகளையும் தமிழ்நாட்டின் நியு செஞ்சுரி புத்தக நிறுவனம் தமிழாக்கம் செய்து அதே போன்றே 37 தொகுதிகளாக வெளியிடப் பட்டாலும் அந்நூல்கள் முழுமை யான மொழிபெயர்ப்பாக அமைய வில்லை என்பதைக் கருத்திற் கொண்டு தற்போது தமிழ்நாடு அரசு, அண்ணல் அம்பேத்கரின் அனைத்துப் படைப்பாக்கங்களை யும் இக்காலச் சூழலுக்கு ஏற்ப பொருள்வாரியான தலைப்பில் எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் பிறமொழிக் கலப்பின்றி உலக மக்களை சென் றடையும் வகையில் வெளியிட அறிவுறுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணலின் ஆக்கங்களுக்கு முன்னர் வெளிவந்த தமிழ்ப் பதிப்பில் இடம்பெற்றுள்ள மணிப் பிரவாள மொழிநடையை இக் காலத் தமிழுக்கு ஏற்ற செழுந் தமிழாக மாற்றியும், அண்ணலின் படைப்புக்களைப் பொருளடைவு மற்றும் கால முறையில் புதிதாக வகை தொகை செய்தும், ‘அண்ணல் அம்பேத்கரின் அறிவுக் கருவூலங்கள்’ எனும் புதிய தலைப்பில் 60 தொகுதிகளாக தமிழ் வளர்ச்சித் துறையோடு நியு செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து வெளியிட முனைந்துள் ளன.

அண்ணல் அம்பேத்கர் அவர்க ளின் நூல்களை எளிய தமிழில் வெளியிடும் திட்டத்தினைச் செயற் படுத்திட சூலுர் பாவேந்தர் பேர வைத் தலைவர் புலவர் செந்தலை ந.கவுதமன், எழுத்தாளர், ஆய் வாளர் பேராசிரியர் வீ.அரசு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தின் மேனாள் பேராசிரியர் முனைவர் மு. வளர்மதி, கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் மேனாள் துணை இயக்குநர் அ. மதிவாணன், சண்முகம் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவின் முதல் கூட்டம் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் அவ்வை அருள் தலை மையில் சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் 09.02.2024 அன்று நடைபெற்றது.
அண்ணல் அம்பேத்கர் கருத்து களின் பொருள் மாறுபாடு தவிர்த் தல்; எளிய தமிழில் அனைவரும் புரிந்துகொள்ளும் மொழி நடை யில் தகுதி வாய்ந்த மாற்றங்களைச் செய்தல்; இக்காலச் சூழ்நிலைக்கு ஏற்ப மொழிவளத்தை அமைத்தல்; பிறமொழிக் கலப்பினை அகற்று தல்; உலக மக்களிடம் எடுத்துச் செல்லுதல் ஆகியவற்றைத் திட்ட மிட்டுச் செயலாற்றவும், தொகுதி களில் இடம்பெறும் அருங்கலைச் சொற்கள் மற்றும் அக்கால வழக் குச் சொற்கள் ஆகியவற்றை அத் தொகுதியின் இறுதியில் சேர்க்கப் பெறலாம் எனவும் அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்களில் இது வரை அச்சில் வெளிவராத, நூல் வடிவில் கிடைக்கப்பெறாத பிற அரிய செய்திகளையும் கண்ட றிந்து, அவற்றையும் தொகுத்து, புதிய தொகுதிகளாக வெளியிடவும், அறிவுச்சுடர் அம்பேத் கரின் ஒளிப்படங்களை பல்வேறு பருவங்களின் அடிப்படையில் அமைத்து அத்தொகுதிகளில் வெளி வரவும், ஒவ்வொரு தொகுதியும் 300 பக்கங்கள் வரை கொண்டதாக அமை யப்பெறும் வகையிலும், அடக்க விலையை விடக் குறைவான விலையா கத் தொகுதி ஒன்றுக்கு ரூபாய் 100/-க்கு மிகாமல் விற்பனை செய்யலாம் என வும் குழுவால் முடிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment