எம்.ஆர்.பி. கோவிட் செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 28, 2024

எம்.ஆர்.பி. கோவிட் செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிப்பு!

featured image

சென்னை,பிப்.28- எம்.ஆர்.பி. கோவிட் செவிலியர்களுக்கு, மீண்டும் பணி வழங்கியதற்கு, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்,எம்.ஆர்.பி கோவிட் செவிலியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜேஷ், மாநில நிர்வாகி பிரபு ஆகியோர் நேரில் நேற்று (27.02.2024) சந்தித்து, நன்றி தெரிவித்தனர்.
வரும் 11.03.2024 திங்கள் மாலை 4 மணிக்கு, சென்னை சைதாப்பேட்டை எஸ்.பி.எஸ். திருமண மண்டபத்தில், தமிழ்நாடு அரசுக்கு நன்றி பாராட்டும் விழா நடைபெற உள்ளது.இந்நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியனும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசனும் கலந்து கொள்கிறார்கள்.

No comments:

Post a Comment