பாஜக ஆளும் ம.பி.யில் கும்பலால் கர்ப்பிணி பாலியல் பலாத்காரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 18, 2024

பாஜக ஆளும் ம.பி.யில் கும்பலால் கர்ப்பிணி பாலியல் பலாத்காரம்

போபால், பிப்.18 பெண்களுக்கு எதிரான வன்முறை பூமியாக மாறியுள்ள உத்தரப் பிரதேசத்தைப் போன்று பாஜக ஆளும் மற்றொரு மாநி லமான மத்தியப்பிரதேசத்தில் பெண் களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மொரேனா மாவட்டத்தின் அம்பா நக ரத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது சந்த்கா புரா கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுமிக்க கர்ப்பிணியை 16.2.2024 அன்று 3 பேர் கொண்ட கும்பல் அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமல்லாமல், பெண்ணின் உடலில் பெட் ரோல் ஊற்றி தீவைத்துள்ளது. 80% தீக்காயங் களுடன் குவாலியரில் உள்ள அரசு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய நிலையில் கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.

No comments:

Post a Comment