கூத்தூர் புலவர் பொன்.முத்துசாமி படத்திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 28, 2024

கூத்தூர் புலவர் பொன்.முத்துசாமி படத்திறப்பு

featured image

ஆலத்தூர், பிப்.28 பெரம்பலூர் மாவட் டம் ஆலத்தூர் ஒன்றியம் கூத்தூர் கிராமம் தமிழ்க்குடில் இல்லத்தில் 26.02.2024 அன்று காலை 10 மணி அளவில் புலவர் பொன்.முத்துசாமி தமி ழாசிரியர் அவர்களின் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சிக்கு மு.திருமாவள வன் வரவேற்புரை ஆற்றினார். கொளக் காநத்தம் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் டி.சீனிவாசன் தலைமையில் மேனாள் ஆலத்தூர் ஒன்றிய துணை பெருந்தலைவர் சி.ஏ.மாணிக்கம், அரிய லூர் அரசு சிமெண்ட் ஆலையில் பணி யாற்றி ஓய்வு பெற்ற என்.தங்கவேல், மற்றும் மு.நாட்டாத்தி, மு. மணிமாறன் அவர்கள் முன்னிலையில், திராவிட முன்னேற்றக் கழக ஆலத்தூர் ஒன்றிய செயலாளர், ஒன்றிய பெருந்தலைவர் என்.கிருட்டிணமூர்த்தி படத்தினை திறந்து வைத்தார். சா. இராசேந்திரன் இணைப்புரை வழங்கினார்.

திராவிடர் கழக அரியலூர் மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருட்டிணன், அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் பெ. நடராசன், திராவிடர் கழக அரியலூர் ஒன்றிய தலைவர்
சி.சிவக்கொழுந்து, அரியலூர் மாவட்ட குடியிருப்போர் நல சங்கத் தலைவர்
அ. நல்லப்பன், கூத்தூர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் இரா.பிச்சை பிள்ளை, கூத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கே.செந்தில், இலந்தங்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மு. தமிழ்ச்செல்வி மற்றும் திராவிட கழக மகளிரணி பொறுப் பாளர் கல்யாணி, ஞானாம்பாள் ஆகி யோர் நினைவேந்தல் உரையாற்றினர்.
ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பயண சீட்டு
பரிசோதகர் வி.அன்பழகன் நன்றி கூறி
னார்.

No comments:

Post a Comment