மக்கள் பணி செய்யாத பா.ஜ.க. ஜாதி, மத அடிப்படையில் வாக்கு சேகரிக்கிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 21, 2023

மக்கள் பணி செய்யாத பா.ஜ.க. ஜாதி, மத அடிப்படையில் வாக்கு சேகரிக்கிறது

பிரியங்கா காந்தி சாடல்

ஜெய்ப்பூர், நவ. 21- ‘பாஜகவினர் மக்கள் பணியை முறையாக மேற்கொள்ளா ததால் ஜாதி, மத அடிப்படையில் வாக்குகள் சேகரித்து வருகின்றனர்’ என காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட் டினார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் 200 சட்டப்பேரவைத் தொகுதிகளுக் கும் வருகின்ற 25-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி கேக்ரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக் கட்சியின் பொதுச்செயலர் பிரி யங்கா காந்தி நேற்று (20.11.2023) பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிர ஸார் ஒற்றுமையுடனே உள்ளனர். ஆனால் பாஜகவில் சில முன்னணித் தலைவர்கள் ஒதுக்கப்பட்டு புதிய தலைவர்களை தேடி வருகின்றனர்.

மத்திய பிரதேசத்தில் பாஜக 18 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தும் மக்கள் பணியை முறை யாக மேற்கொள்ளாததால் ஜாதி, மதங்களின் அடிப்படையில் வாக்கு சேகரித்து வருகின்றனர். இது போன்ற பிரச்சாரங்களிலிருந்து மக்கள் விலகி இருக்க வேண்டும்.

பாஜகவுக்கு வாக்களித்தால் மத் திய பிரதேச நிலைதான் ராஜஸ்தா னுக்கும் ஏற்படும். பாஜகவின் கொள்கைகள் பெரிய தொழில திபர்களுக்கு மட்டுமே பயனளித்து வருகிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களைப்பற்றி அவர்கள் எப்போதும் சிந்திப்பதே இல்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் கல்வி மற்றும் சுகாதாரத்தின் நிலை மிக மோசமானதாக உள்ளது. அதேபோல் பணவீக்கம் அதிகரித் துள்ளது.

ஜி.எஸ்.டி முழுவதும் ஒன்றிய அரசுக்கே செல்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைத் தால் பணவீக்கத்தை கட்டுப்படுத் தலாம். ஆனால் பிரதமர் மோடி அதை செய்வதில்லை. விவசாயிகளுக்கு வழங்க பணம் இல்லை எனக்கூறும் அரசு புதிய நாடா ளுமன்றம் கட்டுவதற்கு கோடிக் கணக்கில் பணத்தை செலவிடுகின்றது.

நாடு வளர்ச்சியடைந்து விட்ட தாக போலியான விளம்பரங்களை மட்டுமே அரசு வெளியிட்டு வருகின்றது. மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்ட அனைத்து நலத்திட்டங்களையும் நிறுத்திவிடுவர் என்றார் அவர்.

No comments:

Post a Comment