அயலகத் தமிழர்களுக்கான கட்டணமில்லா தொலைப்பேசி மய்யம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 17, 2023

அயலகத் தமிழர்களுக்கான கட்டணமில்லா தொலைப்பேசி மய்யம்

சென்னை, நவ. 17- அயலகத் தமிழர்களுக்கான கட்டணமில் லாத 24 மணிநேர தொலைப்பேசி மய்யம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இதனை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தொடங்கி வைத்தார்.

சென்னை எழிலகத்தில் இந்த மய்யம் செயல்படும். இந்தியாவுக்குள் இருப்பவர்கள் 1800 309 3793 என்ற எண்ணிலும், இந்தியாவுக்கு வெளியே இருப்பவர்கள் 806 900 9900 மற்றும் 806 900 9901 ஆகிய எண்களிலும் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் இனி வரும் காலங் களில் தங்களுக்கான பிரச்சினைகளை எதிர்கொள்ள வசதியாகவும், அரசின் ஆலோசனையை எளிதாகவும், விரைவாகவும் பெற ஏதுவாக இந்த கட்டணமில்லாத தொலைப்பேசி எண்கள் உதவும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.



No comments:

Post a Comment