அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு குறித்த அறிக்கையை நாள்தோறும் அளிக்க வேண்டும் பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 20, 2023

அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு குறித்த அறிக்கையை நாள்தோறும் அளிக்க வேண்டும் பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவு

சென்னை, நவ. 20 - பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற் றறிக்கை; தமிழ்நாட்டில் அரசு, உதவி பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங் கப்படும் சத்துணவின் தரம், அளவை உறுதி செய்ய ஏதுவாக தானியங்கி கண் காணிப்பு அமைப்பு உரு வாக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் சத்துணவு குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி யாக அந்தந்த மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு நாள்தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சமூக நலத்துறை ஆணையர் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், ‘சமீபத் தில் மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட் டன. அப்போது பல் வேறு பள்ளிகளில் ஏஎம் எஸ் அமைப்பு மூலம் தினசரி சத்துணவு அறிக் கையை தலைமை ஆசிரி யர்கள் முறையாக மாவட்ட சமூக நலத்துறைக்கு அனுப்பாமல் உள்ளனர்’ என தெரிவித்துள்ளார். 

எனவே, இந்த விவ காரத்தில் அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரி யர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏஎம்எஸ் அமைப்பு மூலம் சத்துணவு அறிக் கையை குறுஞ்செய்தியாக தினமும் காலை 11 மணிக் குள் மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண் டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment