மோடியின் குரலை எதிரொலிக்கிறார் மேனாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் நாட்டுக்கு நல்லதாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 21, 2023

மோடியின் குரலை எதிரொலிக்கிறார் மேனாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் நாட்டுக்கு நல்லதாம்

ரேபரேலி, நவ 21 ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் நாட்டுக்கு நல்லது செய்யும் என்று மேனாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறினார்.

நாடாளுமன்றம், மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை ஒன்றிய அரசு முன்வைத்துள்ளது. இதுபற்றி ஆராய மேனாள் குடியரசுத் தலை வர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ராம்நாத் கோவிந்த், உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறிய தாவது:-

'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம், நாட்டுக்கு நல்லது செய்யும். இதை அமல்படுத்துவதால், பணமும், நாட்டின் வளங்களும் மிச்சமாகும். அப்படி சேமிக்கப்படும் பணத்தை வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தலாம். 

மேலும், இத்திட்டம் ஆக்கப் பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும். அரசு எந்திரத்துக்கு எந்தச் சுமையும் ஏற்படாது. மக்கள் பலன் அடை வார்கள். நானும் ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொண்டுள் ளேன். என் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. பலருடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். ஏறத்தாழ அனைத்துக் கட்சிகளுட னும் ஆலோசனை நடத்தி உள் ளேன். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எல்லா கட்சிகளுமே இந்த திட் டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளன. 

மேலும், நாடாளுமன்ற நிலைக் குழு, நிட்டி ஆயோக், தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் அறிக் கைகளும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தின் அவசியத்தை வலியு றுத்தி உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். 


No comments:

Post a Comment