நாட்டிலேயே அதிக ஊழல் தெலங்கானா அரசாங்கத்தில்தான் ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 27, 2023

நாட்டிலேயே அதிக ஊழல் தெலங்கானா அரசாங்கத்தில்தான் ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு

அய்தராபாத் நவ 27- நாட் டிலேயே அதிக ஊழல் நிறைந்த அரசு தெலங் கானா அரசுதான் என்று ராகுல் காந்தி கூறினார்.

தெலங்கானா மாநி லம் அசோல் மாவட்டத் தில் நடை பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத் தில் உரையாற்றிய ராகுல் காந்தி, தெலங்கானா முதலமைச்சர் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் கே. சந்திரசேகர ராவ்- தனது கட்சி மாநி லத்திற்காக என்ன செய் துள்ளது என்பதை மக்க ளிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார். 

தொடர்ந்து பேசிய அவர், நாட் டிலேயே மிகவும் ஊழல் செய்யும் அரசாங்கத்தை கே. சந் திரசேகர ராவ் நடத்தி வருகிறார். இவரது ஆட் சியில் பணம் கொட்டும் இலாகாக்கள் அனைத் தும் சந்திர சேகர ராவின் குடும்பத்தினர் வசம் தான் உள்ளது என்றும் ராகுல் காந்தி தெரிவித் துள்ளார். இதோடு காங் கிரஸ் கட்சி தெலங்கானா வில் ஆட் சிக்கு வந்ததும், காங்கிரஸ் அளித்திருக் கும் ஆறு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சட்டம் முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே இயற் றப்பட்டு விடும், அவை நிறை வேற்றப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். "தெலங் கானாவில் தற்போது நிலப் பிரதிநிதித்துவ அரசு மற்றும் மக்கள் அரசிடை யேயான போட்டி நிலவி வருகிறது. உங்களது முத லமைச்சர் காங்கிரஸ் கட்சி என்ன செய்திருக்கி றது என கேட்கிறார். ஆனால், காங்கிரஸ் என்ன செய்தது என்பதை விட, கே.சந்திரசேகர ராவ் என்ன செய்திருக் கிறார் என்பதே கேள்வி யாக இருக்க வேண்டும்," என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment