இதுதான் பிஜேபி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 21, 2023

இதுதான் பிஜேபி

வெளிநாட்டு சூதாட்ட விடுதியில் ஒரே நாள் இரவில் 

ரூபாய் மூன்றரை கோடியை செலவு செய்த பா.ஜ.க. முன்னணி தலைவர்

மும்பை, நவ.21 சீனாவில் நடந்த சூதாட்டத்தில் பிஜேபி தலைவர் 3 மணி நேரத்தில் ரூ.3.5 கோடியை இழந்துள்ளார் இது தொடர்பான சான்றுகள் தம்மி டம் இருப்பதாக சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்லார்

மகாராட்டிராவில் சிவ சேனா இரண்டாக உடைந்த பிறகு பா.ஜ.க தலைவர்களும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தலைவர் களும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். தற்போது உத்தவ் தாக்கரே ஆதரவு எம்.பி.சஞ்சய் ராவத் மகாராட்டிரா பா.ஜ.க. தலைவர் சந்திரசேகர் பவன் குலே மீது தெரிவித்துள்ள குற் றச்சாட்டு பா.ஜ.க.தலைவர் களை கடும் கோபத்திற்கு உள் ளாக்கி இருக்கிறது. சஞ்சய் ராவத் இது தொடர்பாக அளித்த பேட்டியில், ''மகா ராட்டிரா பா.ஜ.க.தலைவர் சந்திரசேகர் பவன்குலே சீனா வில் நடந்த சூதாட்டத்தில் ரூ.3.5 கோடியை செலவு செய் துள்ளார்.

இது தொடர்பாக என்னி டம் 27 ஒளிப்படங்கள் மற்றும் அய்ந்து காட்சிப் பதிவுகள் இருக்கிறது. ஆனால் நான் அதனை வெளியிடவில்லை. அதனை வெளியிட்டால் பவன் குலேவுக்கும் அவரது கட்சிக்கும் தர்மசங்கடமாகிவிடும். 

சூதாட்டம் நடக்கும் நடக்கும் இடத்தில் பவன்குலே என்ன செய்துகொண்டிருந்தார் என்பதுதான் எனது கேள்வி. ஒரு நாள் இரவில் ரூ.3.5 கோடியை செலவு செய்துவிட்ட தாக சிலர் என்னிடம் சொன் னார்கள். சூதாட்டம் விளை யாடவில்லை என்றால் அங்கு என்ன செய்து கொண்டிருந்தார். அவர் மூன்று மணி நேரம் சூதாட்டம் விளையாடி 3.5 கோடியை இழந்துள்ளார். அதற்கான பணத்தை அமெ ரிக்க டாலரில் கொடுத்துள்ளார். ஆனால் பா.ஜ.க. இதனை மறைக்க பார்க்கிறது. மகாராஷ் டிராவில் பல்வேறு பிரச்னை களால் மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பவன்குலே சூதாட்டத் தில் பொழுதை கழிக்கிறார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment