தமிழ்நாடு உணவுப் பதப்படுத்தும் திட்டத்துக்கு ஒன்றிய அரசு விருது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 21, 2023

தமிழ்நாடு உணவுப் பதப்படுத்தும் திட்டத்துக்கு ஒன்றிய அரசு விருது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை,நவ.21- உணவுப் பதப்படுத்தும் திட்டத்தில் சிறந்த செயல் திறனுக்கான ஒன்றிய அரசின் விருது தமிழ்நாட்டுக்கு கிடைத்துள் ளது. இதனையடுத்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு, இந்திய உணவுப் பாரம்பரியத்தை அறிமுகம் செய்யவும், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளை இந்தியாவில் நிறுவவும் உலக உணவுத் திருவிழா, நவம்பர் முதல் வாரத்தில் நடை பெற்றது. இதில் பல்வேறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், ஏற் றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள், அரசுப் பிரதிநிதிகள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் கலந்து கொண்டன.

இந்த நிகழ்ச்சியின் இறுதி நாளில், பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தில் சிறந்து செயல்பட்டு வரும் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசின் விருதை குடியரசுத் தலைவர் முர்மு வழங்கினார். இந்த விருதை தலை மைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் காண் பித்து வாழ்த்துப் பெறப்பட்டது. அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், தா.மோ. அன்பரசன் ஆகி யோர் விருதை முதலமைச்சரிடம் வழங்கினர். அப்போது, தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைச் செயலர் அர்ச்சனா பட்நாயக், தொழில் துறை ஆணையர் எல்.நிர்மல்ராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


61 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு

புதுடில்லி,நவ.21- மருந்து உற் பத்தி நிறுவனங்கள், விற்பனைய கங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 61 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக ஒன்றிய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

அவற்றில் பெரும்பாலானவை இமாசலப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப் பட்டவை.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து - மாத்திரைகளும் ஒன்றிய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப் படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 1,105 மருந்துகள் ஆய்வுக்குட் படுத்தப்பட்டன. அவற் றில் கிருமித் தொற்று, செரிமான மண்டல பாதிப்பு, வலி பாதிப்பு, காய்ச்சல், சளி, கால்சியம் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன் படுத்தப்படும் 61 மருந்துகள் தரமற் றவையாக இருந்தது கண்டறியப்பட் டது. இதையடுத்து அதன் விவ ரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


No comments:

Post a Comment