மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரால் 5 பேருக்கு மறுவாழ்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 27, 2023

மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரால் 5 பேருக்கு மறுவாழ்வு

மதுரை, நவ. 27- விபத்தில் மூளைச் சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் மூலம் 5 பேர் மறு வாழ்வு அடைந்துள்ளனர். தேனி மாவட் டம் கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் பரத்குமார் (19). வீரபாண்டி சவுராஷ்ரா கல்லூரியில் பி.பி.ஏ. 2ஆம் ஆண்டு படித்து  வந்தார். இவர், உத்தமபாளையம் அனுமந்தம்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மற்றொரு இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானார்.

இதில், தலையில் பலத்த காயம் அடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக் காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் மூளைச்சாவு அடைந் தார். பரத்குமாரின் தந்தை தன்னுடைய மகன் உடல்உறுப்புகளை கொடையாக அளிக்க முன் வந்தார். இதையடுத்து, பரத்குமாரின் இதயம், நுரையீரல்கள், சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றை எடுத்து அதனை, சென்னை, தஞ்சாவூர், திருச்சி மற்றும் மதுரை மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வரும் 5 நோயா ளிகளுக்கு வழங்கி அவர்களுக்கு மறு வாழ்வு அளிக்கப்பட்டது. மூளைச்சாவு அடைந்த இவரின் மரணம் பெரும் சோகத்தை ஏற் படுத்திய நிலையிலும் அவரது உடல் உறுப்புகள் மூலம் 5 பேர் மறுவாழ்வு பெற்றதை நினைத்து அவரது குடும்பத்தினர் ஆறுதல் அடைந்துனர்.

No comments:

Post a Comment