தேவகவுடா பேரனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 2, 2023

தேவகவுடா பேரனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்

பெங்களூரு, செப்.2 தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக் கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்து கருநாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

நாடாளுமன்றத்திற்கு கடைசி யாக கடந்த 2019ஆ-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் கரு நாடக மாநிலம் ஹாசன் தொகுதி யில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி சார்பில் மேனாள் பிர தமர் தேவேகவுடாவின் பேரனும், மேனாள் அமைச்சர் எச்.டி.ரேவண் ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிட்டார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் ஏ.மஞ்சு களம் கண்டார். இதில் சுமார் 1லு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் பிரஜ்வல் ரேவண்ணா வெற்றி பெற்றார்.

அவரது வெற்றியை எதிர்த்து ஏ.மஞ்சு கருநாடக உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார். அதில் பிரஜ்வல் ரேவண்ணா தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் உண்மை தகவல்களை மறைத்து தவறான தகவல்களை வழங்கி யுள்ளதாகவும், இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தவறு என் றும், அதனால் பிரஜ்வல் ரேவண் ணாவின் நாடாளுமன்ற உறுப் பினர் பதவியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரினார். அதுபோல் பிரஜ்வல் ரேவண் ணாவுக்கு எதிராக வழக்குரைஞர் தேவராஜ் கவுடா என்பவரும் வழக்கு தொடர்ந்தார். அதில் ஒலேநரசிபுராவில் சென்னாம்பிகா கன்வென்ஷன் சென்டரின் மதிப்பு ரூ.5 கோடியாக இருந்தும், அதன் மதிப்பு ரூ.14 லட்சம் என்று பிரமாணப் பத்திரத்தில் பிரஜ்வல் ரேவண்ணா குறிப்பிட்டுள்ளார் என்றும், பெங்களூருவில் உள்ள கருநாடக வங்கியில் ரூ.48 லட்சம் டெபாசிட் தொகை இருந்தும் அதை மறைத்து ரூ.5 லட்சம் என்று குறிப்பிட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.

இதற்கிடையே ஏ.மஞ்சு தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உரிய முறையில் மனுவை தாக்கல் செய்யவில்லை என்று கூறி அந்த மனுவை நீதிபதி ரத்து செய்தார். இதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்று  உச்சநீதிமன்றம் ஏ.மஞ்சுவின் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதி மன்ற உத்தரவை ரத்து செய்து உத்தர விட்டது. இதையடுத்து ஏ.மஞ்சுவின் மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. நீதிபதி நடராஜ் இந்த வழக்கை விசாரித்தார். முடி வில் பிரஜ்வல் ரேவண்ணாவின் நாடா ளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்து நீதிபதி உத்தர விட்டார். 

 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது

இந்த தீர்ப்பின் மூலம் பிரஜ்வல் ரேவண்ணா 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மனு தாக்கல் செய்ய உள்ளார். அதன் அடிப்படையில் கருநாடக உயர்நீதிமன்றத்தின்  தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப் பட்டால், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் பிரஜ்வல் ரேவண் ணாவுக்கு துணைபோனதாக அவ ரது தந்தையும், மேனாள் அமைச் சருமான எச்.டி.ரேவண்ணா, தம்பி சூரஜ் ரேவண்ணா எம்.எல்.சி. ஆகி யோருக்கு கருநாடக உயர்நீதிமன்றம் அறிக்கை அனுப்பியுள்ளது. 

கருநாடகத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு மக்களவையில் ஒரே  நாடாளுமன்ற உறுப்பினர் தான் உள்ளார். அவரது  பதவியும் பறிக்கப்பட்டுள்ளதால், மக்கள வையில் அக்கட்சிக்கு  நாடாளுமன்ற உறுப்பினர் இல்லாத நிலை ஏற்பட் டுள்ளது. தேவேகவுடா மாநிலங்களவை உறுப்பினரா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  தகுதி நீக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா. ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்தவர். அவரது தேர் தல் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ஏ.மஞ்சு முன்பு பா.ஜனதா கட்சியில் இருந்தார். தற்போது அவர் ஜனதா தளம் (எஸ்) கட்சியில் அரக் கல்கோடு தொகுதி சட்டமன்ற உறுப் பினராக  உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment