குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை நாகர்கோவில் மாநகர பகுதிகளில் நடந்தது. கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கழக மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு, மாநகர தலைவர் ச.ச.கருணாநிதி, மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ் மாநகர செயலாளர் இராஜசேகர் தோழர்கள் , பொன் எழில் அரசன் மற்றும் கிளைக்கழக பொறுப்பாளர்கள், தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு பகுத்தறிவு விழிப் புணர்வுக்கான துண்டறிக்கைகளை வழங்கினர். பொதுமக்கள் படித்து அறிவுத்தெளிவு பெற்றனர்.
Wednesday, August 9, 2023
பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment