மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 9, 2023

மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது

சென்னை, ஜூலை 9- பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் தமிழ்நாட்டில் செயல் படுத்தப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான தேசியக் கொள்கை ஆகியவற்றை தமிழ் நாட்டில் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி கங் காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகி யோர் அடங்கிய அமர்வில் விசார ணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் ஏ. இளைய பெருமாள், அரசு தரப்பில்  பி. முத்துக் குமார், அரசு சிறப்பு வழக்குரைஞர் ஆர். அனிதா ஆகியோர் ஆஜராகினர். அரசுத் தரப்பு வாதத்தில், "மூத்த குடி மக்களின் நலனை பாதுகாக்கும் வகை யில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக் கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும், தங்கள் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் வசிக்கும் மூத்த குடிமக்களின் விவரத்தை சேகரித்து வைக்கவும், அவர்கள் ஏதேனும் புகாரளித்தால் அதற்கு முன்னுரிமை கொடுத்து, அதனை தீர்த்து வைக்கவும் தமிழ்நாடு டிஜிபி சுற்றறிக்கை பிறப் பித்துள்ளார்.மூத்த குடிமக்களின் பாது காப்பை உறுதி செய்வதற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது. அரசுத் தரப்பு வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment