பத்திரப் பதிவுத்துறையில் சேவைகளுக்கான கட்டணம் உயர்வு : தமிழ்நாடு அரசு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 9, 2023

பத்திரப் பதிவுத்துறையில் சேவைகளுக்கான கட்டணம் உயர்வு : தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, ஜூலை 9 பத்திரப்பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. 

ஜுலை 10 ஆம் தேதி முதல் அனைத்து பத்திரப்பதிவு சேவை கட்டண உயர்வுகளும் நடைமுறை அமலுக்கு வருகிறது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.  ரசீது ஆவணத்திற்கு பதிவுக் கட்டணம் ரூ.20 இல் இருந்து ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுளள்து. அதிகபட்ச முத்திரை தீர்வை கட்டணம் ரூ. 25,000 இருந்து ரூ.40,000 ஆக உயர்கிறது. தனிமனை பதிவிற்கான கட்டணம் ரூ.200 இல் இருந்து ரூ.1000 ஆக உயர்கிறது.

No comments:

Post a Comment