கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கச் சிறப்பு முகாம்கள் சென்னை மாநகராட்சி அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 9, 2023

கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கச் சிறப்பு முகாம்கள் சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை, ஜூலை 9 சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டச் செயலாக்கம் குறித்த ஆலோ சனைக் கூட்டம் நேற்று (8.7.2023) முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடை பெற்றது.  

இது குறித்து சென்னை மாநகராட்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ”கலைஞர் மகளிர் உரிமைத் திட் டத்திற்குத் தகுதியான பயனாளிகளின் விவரங்களைத் தேர்ந் தெடுக்கும் பொருட்டு பெருநகர சென்னை மாநக ராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகள் கண்ட றியப்பட்டுள்ளன. 

குடும்ப அட்டைகளின் எண்ணிக் கையின் அடிப்படையில் பள்ளிக் கூடங்கள். சமுதாய நலக்கூடங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் இரவு காப்பகங்கள் எனத் தேவையான முகாம்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

ஜூலை 3ஆம் வாரம் தேர்வு செய் யப்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. இந்த முகாம்கள் நடைபெறும் இடங்களில் குடிநீர் வசதி, மின்விசிறி, மின்வசதி, இருக்கைகள், கழிப்பறை, தீயணைப்புக் கருவிகள், சாய்வு நடைபாதை வசதிகள், முதலுதவிப் பெட்டி வசதிகளும் ஏற்படுத்தப்பட உள் ளன. மேலும், தேவையான இடங்களில் பந்தல்களும், மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள், கர்ப்பிணிகள் போன் றோருக்குத் தேவையான வசதிகளும் ஏற் படுத்தப்பட உள்ளன.” எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment