கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நிதி பெற தகுதியானவர்கள் யார் விதிமுறைகள் வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 8, 2023

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நிதி பெற தகுதியானவர்கள் யார் விதிமுறைகள் வெளியீடு

சென்னை, ஜூலை 8- "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கும் வழி முறைகள் வெளியிடப்பட்டுள்ளன. தகுதியான குடும்பத்தில் 21 வயது நிரம்பிய பெண், அதாவது 2002 செப்.15-ஆம் தேதிக்கு முன்பு பிறந்த வர்கள் விண்ணப்பிக்கலாம். விண் ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலைக் கடை அமைந்துள்ள விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டும்விண்ணப் பிக்கலாம். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப் பிக்க முடியும்.

குடும்ப தலைவி யார்?

தகுதி வாய்ந்த குடும்பத்தில் குடும்பத் தலைவி விண்ணப்பிக் கலாம். குடும்ப அட்டையில் ‘குடும் பத் தலைவர்’ என்று குறிப்பிடப்பட் டிருக்கும் பெண், குடும்பத் தலைவி யாக கருதப்படுவார். குடும்பத் தலைவராக ஆண் இருக்கும் பட் சத்தில் அவரது மனைவி குடும்பத் தலைவியாக கருதப்படுவார். திரு மணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள், திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந் தால் அவர்களும் குடும்பத் தலைவி களாக கருதப்படுவர். ஒரு குடும்பத் தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந் தால், ஒரு நபரை குடும்ப உறுப்பி னர்கள் தேர்வு செய்து விண்ணப் பிக்கச் செய்யலாம். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5லட்சத்துக்கு கீழ் இருக்க வேண்டும். 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய், 10 ஏக்கருக்கு குறைவாகபுன்செய் நிலம் வைத் துள்ள குடும்பங்கள், ஆண்டுக்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் விண் ணப்பிக்கலாம். பொருளாதார தகுதிகளுக்காக தனியாக வருவாய் சான்று,நில ஆவணங்களை விண் ணப்பத்துடன் இணைக்கத் தேவையில்லை.  ரூ.2.5 லட்சத்துக்குமேல் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், வருமான வரி செலுத்துவோர், தொழில்வரி செலுத்துவோர் விண்ணப்பிக்க முடியாது. ஒன்றிய, மாநிலஅரசு ஊழியர்கள், பொதுத் துறைநிறுவனங்கள், வங்கி ஊழி யர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப் புகளின் ஊழியர்கள் மற்றும் அவற் றின் ஓய்வூதியர்களும் விண்ணப் பிக்க முடியாது. ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் தவிர தேர்ந் தெடுக்கப்பட்ட மக்கள் பிரதி நிதிகள், சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாக னம் போன்றவை வைத்திருப்போர் விண்ணப்பிக்க இயலாது. 

ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் ஆண்டு விற்பனை செய்து ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறு வன உரிமையாளர்கள், ஏற்கெ னவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வூ தியம் போன்ற சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசி டம் இருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் இதில் பயன்பெற இயலாது. மாற்றுத் திறனாளிகள் நலத் துறையால் வழங்கப்படும் கடும் உடல் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகளுக்கான பரா மரிப்பு உதவித் தொகை பெறும் உறுப்பினர்களை கொண்ட குடும் பங்கள், இத்திட்டத்தின் பிற தகு திகளைபூர்த்தி செய்தால் விண்ணப் பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க, ஆண்ட்ராய்டு கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதில் குடும்ப அட்டை எண், ஆதார்எண், தொலை பேசி, ஒளிப்படம், வயது, மாவட்டம், தொழில்,வீடு வாட கையா? சொந்தமா?நிலம் வைத்தி ருப்பவரா, வாகனம் வைத்துள்ள வரா, வங்கிக் கணக்குஎண், உறுதி மொழி ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

No comments:

Post a Comment