7 உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 9, 2023

7 உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை

புதுடில்லி, ஜூலை 9 - ஆந்திரா, தெலங் கானா, கேரளா உள்ளிட்ட 7 மாநிலங்களின் உயர் நீதிமன் றங்களில் புதிய தலைமை நீதிபதி களை நியமிக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

ஆந்திரா, தெலங்கானா, கேரளா, ஒடிசா, மகாராட்டிரா, குஜராத், மணிப்பூர் ஆகிய 7 மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் 5.7.2023 அன்று கூடியது. கொலி ஜியத்தின் உறுப்பினர்களான நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கன்னா ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர். பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு 7 உயர் நீதிமன்றங்களுக்கும் புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க ஒன்றிய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை பட்டியலை அனுப் பியது.

இதன்படி தற்போது மகா ராட்டிர உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றும் திராஜ் சிங் தாக்குரை ஆந்திர உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலி ஜியம் பரிந்துரை செய்துள்ளது.

கருநாடக உயர் நீதிமன்றத் தில் நீதிபதியாகப் பணியாற்றும் அலோக் ஆராதேவை தெலங் கானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டிருக்கி றது.

குஜராத் உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றும் ஆசிஷ் ஜே தேசாயை கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஒடிசா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் சுபாஷிஸ் தலபத்ராவுக்கு அந்த உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யாக பதவி உயர்வு வழங்க ஒன்றிய அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் அல காபாத் உயர் நீதிமன்றத்தில் நீதி பதியாகப் பணியாற்றும் தேவேந் திர குமார் உபாத்யாயாவை மகாராஷ்டிர உயர் நீதிமன்றத் தின் தலைமை நீதிபதியாக நிய மிக்க பரிந்துரை செய்யப்பட் டிருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றும் சுனிதா அகர்வாலை குஜராத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க ஒன்றிய அரசிடம் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

டில்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றும் சித்தார்த் மிருதுளை மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க ஒன்றிய அரசிடம் கொலிஜியம் பரிந் துரை செய்துள்ளது. இவை தொடர்பாக கொலிஜியம் கூட் டத்தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டு உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

ஒன்றிய அரசு ஒப்புதல் வழங் கிய பிறகு குடியரசுத் தலைவர் அதிகாரபூர்வமாக ஆணை களை வெளியிடுவார். இதைத் தொடர்ந்து 7 உயர் நீதிமன்றங் களில் புதிய தலைமை நீதிபதிகள் விரைவில் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment