293 பேர் உயிர் குடித்த ஒடிசா ரயில் விபத்து மூன்று ரயில்வே ஊழியர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 8, 2023

293 பேர் உயிர் குடித்த ஒடிசா ரயில் விபத்து மூன்று ரயில்வே ஊழியர் கைது

பலாசோர், ஜூலை 8 கடந்த ஜூன் 2-ஆம் தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டம், பாஹா நாகா பஜார் பகுதியில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட தில் 293 பேர் உயிரிழந்தனர். மனிதத் தவறால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர், இந்திய ரயில்வே அமைச்சகத்திடம் அறிக்கையை சமர்ப்பித்தார்.

ரயில் விபத்து தொடர்பாக சி.பி.அய். விசாரணை நடத்தி வருகிறது. பல்வேறு கோணங் களில் ரயில்வே விசாரணை நடத்தி வரும் நிலையில்  ரயில்வே மூத்த பொறி யாளர்கள் மூன்றுபேரை சி.பி.அய். கைது செய்துள்ளது. அருண் குமார் மஹந்தா, முகம்மது அமீர் கான், பப்பு குமார் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆதா ரங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச் சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment