எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்திய மோடி - சசிதரூர் பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 4, 2023

எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்திய மோடி - சசிதரூர் பேட்டி

புதுடில்லி,  ஏப். 4- ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிப்பு, எதிர்க்கட்சிகளை ஒன்று படுத்தி இருக்கிறது என்று சசிதரூர் கூறினார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மேனாள் ஒன்றிய அமைச்சருமான சசி தரூர், செய்தி நிறுவனம் ஒன் றுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:

ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிப்பு, எதிர்க் கட்சிகளை ஆச்சரியப்படத்தக்க வகையில் ஒன்றுபடுத்தி இருக்கி றது. எதிர்க்கட்சிகள் தற்போது ஒன்று சேரவும், ஒருவர் ஓட்டை மற்றவர் பிரிப்பதை நிறுத்தவும் ஒரு காரணத்தைக் கண்டுள்ளன. 2024 தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறு வது மிகவும் கடினமாகி இருக்கிறது.

தங்கள் மாநிலங்களில் காங்கி ரசை எதிர்த்து வந்த டில்லியின் ஆம் ஆத்மி, மேற்கு வங்காளத்தின் திரிணாமுல் காங்கிரஸ், உத்தரப் பிரதேசத்தின் சமாஜ்வாடி, தெலுங் கானாவின் பாரத ராஷ்டிர சமிதி, கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு ஆகியவை ஒன்றுபட்டுள்ளன.

ஒன்றுபட்டால் வாழ்வோம், பிரிந்தால் வீழ்வோம் என்ற பழ மொழியின் உண்மையை பல கட்சி கள் உணரத்தொடங்கி உள்ளன. நாடு முழுவதும் சுவடு பதித்துள்ள ஒரே எதிர்க்கட்சி காங்கிரஸ்தான். நாடாளுமன்ற தேர்தலில் 200 இடங்களில் காங்கிரசுக்கும், பா.ஜ. க.வுக்கும்தான் நேரடி போட்டி.

மற்ற எதிர்க்கட்சிகள் ஒரு மாநிலத்தில் வலுவாக இருக்கின்றன. மேலும் ஒன்றல்லது 2 மாநிலங்களில் இருக்கின்றன. இந்த சூழ்நிலைகளில், நாங்கள் உண்மையில் ஒரு மாற்றை வழங்கு வதற்காக எதிர்க்கட்சிகளை ஒன்றி ணைப்பதில் முக்கிய பங்கு வகிப் போம். நான் கட்சித் தலைவராக இருந்தால், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர் கொள்வதற்கு சிறிய கட்சிகளில் ஒன்றை எதிர்க்கட்சி கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட ஊக்குவிப்பேன்.

எனது பார்வையில், ஒற்றுமை தான் முக்கியம். ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிப்பை அவரது பாட்டி இந்திரா வின் மக்களவை உறுப்பினர் பதவி பறிப்புக்கு இணையாகப் பார்க் கிறீர்களா என கேட்கிறீர்கள். ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையிலும், பதவி பறிப் பிலும் மக்களின் அனுதாபம் கிடைத்திருக்கிறது.

முக்கிய எதிர்க்கட்சியின் தலை வருக்கு சிறைத்தண்டனை விதித்து, நாடாளுமன்றத்தில் அவரது குரல் ஒலிப்பதை தடுப்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்று மக்கள் உணர்கிறார்கள் என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment