விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் விடுதலை தி.ஆதவனின் மாமியாரும், மாவட்ட. மகளிரணி அமைப்பாளர் சாந்தி அவர்களின் தாயாருமான நெ.இராசம்மாள் (வயது 92) உடல் நலக் குறைவு காரணமாக 19.3.2023 ஞாயிறு இரவு 10 மணியளவில் இறுதி எய்தினார். செய்தி அறிந்து மாவட்ட தலைவர் கா.நல்லதம்பி, அமைப்பாளர் வெ.முரளி, மண் டல இளைஞரணிச் செயலாளர் இரா.அழகர், நகர ப.க. செயலாளர் பூ.பத்மநாதன், நகர தலைவர் சு.செல்வராசு, செயலாளர் பா.இராசேந்திரன், நகர இளைஞரணித் தலை வர் க.திருவள்ளுவர், செயலாளர் ஆ.கிள்ளி வளவன் மற் றும் தோழர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் பெருமளவில் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினர். 20.3.2023 திங்கள் காலை 10 மணியளவில் எவ்வித மூடச் சடங்குகளும் இல்லாது இறுதி ஊர்வலமாகச் சென்று, நக ராட்சி பொது எரிவாயு தகன மேடையில் எரியூட்டப்பட்டது.
Tuesday, March 21, 2023
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment