தூய்மைப் பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை: மேயர் ஆர்.பிரியா வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 19, 2023

தூய்மைப் பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை: மேயர் ஆர்.பிரியா வழங்கினார்

சென்னை,மார்ச்19- தூய்மை பணியா ளர்களுக்கு நல  வாரியத்தின் அடையாள அட்டைகள் மற்றும் உதவித் தொகைக்கான காசோலைகளை மேயர் ஆர்.பிரியா  வழங்கினார்.

சென்னை மாநகராட்சியில் பணி புரியும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார  இயக்கத்தை சார்ந்த தூய்மைப் பணியா ளர்கள், தற்காலிக தூய்மைப் பணியா ளர்கள் மற்றும் தூய்மைப் பணி மேற் கொள்ளும் நிறுவனங்களில் பணிபு ரியும் தூய்மைப் பணியாளர்கள்  14,001 பேரை தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தின் கீழ் உறுப்பினராக சேர்ந்து அவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தூய்மைப் பணியா ளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழக தூய்மைப் பணியாளர் நல வாரியம் சார்பில் பெருநகர சென்னை மாநக ராட்சியின் வடக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு நல வாரியத்தின் அடையாள அட்டை கள் மற்றும் நலத்திட்ட உதவிகளுக்கான காசோலைகளை மேயர் ஆர்.பிரியா வடக்கு வட்டார அலுவலகத்தில் வழங்கினார்.

சென்னை மாநகராட்சியின் வடக்கு வட்டார அலுவலகத்திற்கு உட்பட்ட 1 முதல் 5 வரையிலான மண்டலங்களில் 1,938 தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.  இந்த பணியாளர்களில் 1,250 பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.  இவர்களுக்கு நல வாரியத்தின் அடை யாள அட்டைகளை வழங்கும் விதமாக,  மேயர் ஆர்.பிரியா 64 தூய்மைப் பணி யாளர்களுக்கு அடையாள அட்டை களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ராயபுரம் சட்டமன்ற  உறுப்பினர் அய்ட்ரீம் ஆர்.மூர்த்தி, துணை மேயர் மகேஷ்குமார், வடக்கு வட்டார  துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன்,  அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்  உள்பட  பலர் கலந்து கொண்டனர்.

உதவித்தொகை

தூய்மைப் பணியாளர்கள் நல வாரி யத்தின் சார்பில் வழங்கப்படும் அடை யாள அட்டையின் மூலம் பணியிடத் தில் விபத்து மரணம், பணியிடம் அல்லாத இடத்தில் விபத்து மரணம், இயற்கை மரணம், இறுதி நிகழ்வு, கல்வி, முதியோர் ஓய்வூதியம், திருமணம், மகப்பேறு மற்றும் கண் கண்ணாடி வாங்குதல் உள்ளிட்டவற்றிற்கு தமிழ் நாடு தூய்மைப் பணியாளர் நல வாரி யம் மூலம் உதவித் தொகை வழங்கப் படுகிறது.

5,707 பேர் பயன்

சென்னை மாநகராட்சி சார்பில் இதுவரை  5,707 தூய்மைப் பணியாளர் களுக்கு நல வாரியத்தின் அடையாள அட்டைகள்  வழங்கப்பட்டுள்ளது.  இதர தகுதியுடைய நபர்களுக்கு அடை யாள அட்டைகள் வழங்கும்  நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும்,  10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம்  வகுப்பு தேர்ச்சி பெற்ற தூய்மைப் பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 5 பேருக்கு  ரூ.5,500 உதவித் தொகைக்கான காசோலைகளையும், திருமண உதவித் திட்டத்தின்  அடிப்படையில் 2 தூய் மைப் பணியாளர்களுக்கு ரூ.6000 உதவித் தொகைக்கான  காலைகளையும் வழங்கினார்.


No comments:

Post a Comment