பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியருக்கு இந்திய பொறியாளர் நிறுவனத்தின் விருது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 23, 2022

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியருக்கு இந்திய பொறியாளர் நிறுவனத்தின் விருது

இந்திய பொறியாளர்களுக்கான நிறுவனத்தின் தமிழ்நாடு கிளையின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பொறியியல் கல்வியிலும், பொறியியல் தொழில் துறையிலும் சிறந்து விளங்கும் 32 நபர்களுக்கு சிறப்பு விருதுகள் கடந்த 15.12.2022 அன்று சென்னையில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது.  பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலை பல்கலைக் கழகம்) கட்டடவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றும் பேரா. சி.செந்தமிழ்குமாருக்கு கல்வித்துறைக்கான பிரிவில் 'கல்விசார் சிறப்பு விருது; வழங்கி கவுரவிக்கப்பட்டது. பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின்  வேந்தர் டாக்டர் கி.வீரமணி,  ஆட்சிமன்ற குழு உறுப்பினர்   வீ.அன்புராஜ்,   துணை வேந்தர், பதிவாளர்ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.


No comments:

Post a Comment