இடஒதுக்கீடு பயன் முழுமைபெற பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பு இன்றியமையாதது! : வைகோ - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 10, 2022

இடஒதுக்கீடு பயன் முழுமைபெற பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பு இன்றியமையாதது! : வைகோ

சென்னை,நவ.10- மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற மாநி லங்களவை உறுப்பினருமான  வைகோ  வெளியிட்டுள்ள அறிக்கையில் இட ஒதுக்கீடு பயன் முழுமைபெற ஓபிசி கணக்கெடுப்பு இன்றியமையாதது என்று வலியுறுத்தியுள்ளார். 

அறிக்கையின் விவரம் வருமாறு,

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் இதர பிற்படுத்தப் பட்டோருக்கு (ஓ.பி.சி) ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப் பில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

1931 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது எடுக்கப் பட்ட ஜாதிவாரி புள்ளி விவரங்கள் அடிப்படையில் அந்த இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது.

விடுதலைபெற்ற இந்தியாவில், இதர பிற்படுத்தப்பட்டோர் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக் கீட்டு உரிமையை முழுமையாகப் பெறுவதற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இதர பிற்படுத்தப்பட்டோர் அமைப்பு களும், அரசியல் கட்சிகளும் தொடர்ச்சியாகக் கோரி வருகின்றன.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரை அடிப் படையில் 2001 இல் இதர பிற்படுத் தப்பட்டோர் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசின் சமூகநீதித்துறை பரிந்துரை செய்தது. ஆனால் செயல்பாட்டுக்கு வரவில்லை.

இதனிடையே 2021 ஆம் ஆண்டு மேற்கொள்ள வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் ஆகஸ்டு 30, 2018 இல் நடந்தது. இதில் அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இதர பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை பற்றிய விவரங்களும் சேகரிக்கப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், கடந்த 2021 ஆம் ஆண்டில் நடைபெற வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கரோனா  தொற்றுப் பரவல் காரண மாக தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, இதர பிற்படுத்தப்பட்டோர் விவரங்கள் எடுக்க வேண்டும் என்று கோரி அகில இந்திய ஓ.பி.சி. ஒருங்கிணைப்புக் குழு அளித்த மனுவை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை நீதியரசர்கள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, “மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, ஓ.பி.சி. பிரிவு அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்த முடியாது என்பது அரசின் கொள்கை முடிவு” என்று ஒன்றிய பா.ஜ.க. அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

மாண்பமை நீதிபதிகள், “மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, ஓ.பி.சி. பிரிவின் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று எதன் அடிப்படையில் ஒன்றிய அரசு தெரிவிக்கிறது? 1951 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவை தற்போது மக்கள் நலனுக்காக மாற்ற பரிசீலிக்கலாமே” என்று அறிவுறுத்தி உள்ளனர்.

இடஒதுக்கீட்டுப் பயனை முழு மையாக இதர பிற்படுத்தப்பட்டோர் பெறுவதற்கு மக்கள் தொகை கணக் கெடுப்பின்போது, ஜாதிவாரி புள்ளி விபரங்களையும் எடுக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

-இவ்வாறு வைகோ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 


No comments:

Post a Comment