கோகிமா,டிச.31- நாகாலாந்தில் அப்பாவிப் பொதுமக்கள் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக் கிச்சூடு நிகழ்வைத் தொடர்ந்து, ஆயுதப் படைகள் சிறப்பு அதி காரங்கள் சட்டத்தை (ஆஃப்ஸ்பா) ரத்து செய்ய வேண்டும் என அம்மாநில அரசு தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறது.
இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் வட கிழக்கு மாநில முதலமைச்சர்களின் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் நாகாலாந்து முதலமைச்சர் நெபியூ ரியோ, அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா, நாகாலாந்து துணை முதலமைச்சர் யாந்துங்கோ பேட்டன் போன்றோர் கலந்து கொண்டனர். ஆஃப்ஸ்பா சட்டத் தைத் திரும்பப் பெறுவது தொடர் பான ஆய்வை நடத்த ஒரு குழுவை அமைப்பது என அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கிளர்ச்சியாளர்கள் எனத் தவறாகக் கருதி, 14 பேரைச் சுட்டுக் கொன்ற ‘21 பாரா சிறப்புப் படை’ வீரர்கள் மீது விசாரணை நடத்த அம்மாநிலத்தைச் சேர்ந்த புல னாய்வுக் குழுவுக்கு ராணுவம் அனுமதி வழங்கியிருந்தது.
ஆனால், அம்மாநிலத்தில் மேலும் 6 மாதங்களுக்கு இந்தச் சட்டம் நீட்டிக்கப்படுகிறது.
‘பதற்றத்துக்குரிய பகுதி’ என அறிவிக்கப்பட்டு, தொடர்ச்சியாக 6 மாதங்களுக்கு இச்சட்டம் நாகா லாந்தில் நீட்டிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. நாகாலாந்தில் இச்சட்டம் 6 மாதங்கள் நீட்டிக் கப்படும் என 2020 டிசம்பர் 30-இல் ஒன்றிய உள் துறை அமைச்சகம் அறிவித்தது. பின்னர் இச்சட்டம் 2021 டிசம்பர் 31 வரை நீட்டிக்கப் படும் என ஜூன் 30-இல் அறிவிக்கப் பட்டது. இந்நிலையில், அம்மாநி லத்தில் மேலும் 6 மாதங்களுக்கு இச்சட்டம் நீட்டிக்கப்படுகிறது.
ஆஃப்ஸ்பா சட்டம் அமலில் இருக்கும் பகுதிகளில் ராணுவத் தினர் எடுக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாது. மனித உரி மைகள், அடிப்படை உரிமைகள் என்று அரசியல் சட்டம் அளிக்கும் உரிமைகளை இப்பகுதிகளில் வசிப்பவர்கள் கோர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment