சென்னை,செப்.18- தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று (18.9.2021) காலை பதவியேற்றார். ஏற்கெனவே ஆளுநராக பதவி வகித்து வந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். இதையடுத்து இன்று புதிய ஆளுநரின் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் மண்டபம் அருகே உள்ள திறந்தவெளி புல்வெளி அரங்கில் நடைபெற்றது. இன்று காலை தமிழ்நட்டின் 15ஆவது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், நீதிபதிகள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகாரிகள் பங்கேற்றனர்.
Saturday, September 18, 2021
தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்றார்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment