திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 16, 2021

திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும்

டாக்டர். வி.ஜி.சந்தோசம் வேண்டுகோள்

சென்னை, ஜூன்16- தமிழ்நாடு முதல்அமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள், 17 ஆம் தேதி பிரதமர் மோடி அவர்களை சந்திக்கும் போது, உலகப் பொதுமறையாம் திருக்குறள் நூலை தேசிய நூலாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இதுவரை விஜிபி உலகத்தமிழ்ச்சங்கம் பல்வேறு நிகழ்வுகளின் வழியே மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு முதல்அமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள், புதுடில்லி சென்று பிரதமரை சந்திக்கவிருக்கும் இன்றைய சூழலில் செந்தமிழின் சீர்மிகு அடையாளமாம் திருவள்ளுவரின் திருக்குறளை தேசிய நூலாக ஆக்க ஆவன செய்ய வேண்டும் என்று விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக வேண்டுகின்றேன்.

No comments:

Post a Comment