பா.ஜ.க. ஆளும் உ.பியில் தொடரும் மதவெறி ஆட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 17, 2021

பா.ஜ.க. ஆளும் உ.பியில் தொடரும் மதவெறி ஆட்டம்

 "ஜெய் சிறீராம்" கூறச் சொல்லி இஸ்லாமிய முதியவர் மீது கொலைவெறித் தாக்குதல்

லக்னோ, ஜூன்17 உத்தரப்பிர தேச மாநிலம், காசியாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்துல் சதாம். முதியவரான இவர் லோனி நகரில் தொழு கைக்காக மசூதிக்கு நடந்து சென்றபோது, ஒரு கும்பல் அவரை வாகனத்தில் கடத்திச் சென்று சரமாரியாகத் தாக்கியுள் ளது. அவர் தாக்கப்படும் காட்சிப்பதிவு இணையத்தில் வைரலானது. இது தொடர்பாக காசியாபாத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பிரவேஷ் குஜ்ஜார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். மேலும் மற்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின் றனர். இந்த தாக்குதல் ஜூன் 5ஆம் தேதி நடந்தது என காவல் துறையினர்  தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தாக்குதலுக் குள்ளான அப்துல் சதாம் கூறுகையில், "நான் மசூதிக்கு சென்றபோது, ஒரு ஆட்டோ ரிக்ஷா டிரைவர் எனக்கு லிஃப்ட் கொடுத்தார். அப்போது அந்த ஆட்டோவில் இரண்டு பேர் ஏறினர். பின்னர் அவர்கள் என்னை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஓர் அறையில் அடைத்து வைத்து என்னைத் தாக்கினர். அப்போது, அவர்கள் ஜெய் சிறீ ராம் மற்றும் வந்தே மாதரம் எனக் கூறுமாறு வற்புறுத்தி என்னை தாக் கினார்கள். அவர்கள் என் தொலைபேசியைப் பறித்துக் கொண்டு என் கைக்கடிகாரத்தை உடைத்தார்கள். பின்னர், அந்த கும்பல் கத்தரிக்கோலால் என் தாடியை வெட்டி எடுத்தார்கள். இஸ்லாமியர்களைத் தாக்கும் காட்சிப்பதிவைக் காட்டி என்னைக் கொலை செய்வ தாகவும் மிரட்டினர்என தெரிவித்துள்ளார்.

பா.. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுவும் குறிப்பாக பா.. ஆளும் மாநி லங்களான உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இது போன்ற இந்துத்துவா வன்முறை கும்பலின் தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment