பசு மாட்டைக் கடத்தியதாக கூறி இளைஞர் அடித்துக் கொலை! ராஜஸ்தானில் ஹிந்துத்துவா கும்பலின் அட்டூழியம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 17, 2021

பசு மாட்டைக் கடத்தியதாக கூறி இளைஞர் அடித்துக் கொலை! ராஜஸ்தானில் ஹிந்துத்துவா கும்பலின் அட்டூழியம்

 ஜெய்ப்பூர்,ஜூன்17- ராஜஸ்தான் மாநிலத்தில் மாடுகளைக் கடத்தியதாக கூறி, பாபுலால் பில் (வயது 25) என்பவர்  பசு குண்டர்கள் எனப்படும் ஹிந்துத்துவா வன்முறைக் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். மத்தியப் பிரதேசத்தின் அச்சல்பூரை சேர்ந்தவர் பாபு லால் பில் (25). இவரதுநண்பர் பிந்து. 2 பேரும் மாடுகளை வேனில்ஏற்றிக் கொண்டு ராஜஸ்தானுக்கு சென்றுகொண்டு இருந்துள்ளனர். இந்நிலையில், சித்தர்கர் மாவட்டத்தில் பெகுன் என்ற இடத்திற்கு சென்றபோது, அங்கே ஒரு கும்பல் இவர்களை திடீரென வழிமறித்து, மாடுகளை கடத்திச் செல்கிறீர்களா..? என்று கேட்டுக்கொண்டே சரமாரியாக தாக்கியுள்ளது.இதுதொடர்பான தகவல் காவல்துறையினருக்கு கிடைத்து, அவர்கள் அங்கு சென்றபோது, பசு குண்டர்கள், இளை ஞர்கள் இருவரையும் தாக்கி அவர்களிடமிருந்த ஆவணங்களையும் செல்பேசிகளையும் பறித்துக் கொண்டு தப்பியுள்ளனர்.

இதனிடையே, படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 2 பேரையும் காவல்துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பாபு லால்பில் உயிரிழந்தார்.  பிந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

2017இல் பேலுகான் என்பவரும், 2018இல் ரக்பார் கான் என்பவரும் இதேபோல பசுமாடுகளை வாங்கிக் கொண்டு சென்றபோது பசு குண்டர்களால் அடித்துக்கொல்லப்பட்டனர். தற்போது பசு குண் டர்களின் கொலைவெறிக்கு பாபுலால் உயிரும் பறிபோயுள்ளது.

No comments:

Post a Comment